இஸ்ரேலை முடமாக்கிவிட்டது ஹிஸ்புல்லா – ராணுவ ஜெனரல் வேதனை!

ஹோட்டல்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள வடக்கு இஸ்ரேல் ஆக்கிரமிப்பாளர்கள்…
நாட்டையே ஹிஸ்புல்லா முடமாக்கிவிட்டதாக ராணுவ ஜெனரல் வேதனை…
காசா மீது இஸ்ரேல் போர் அறிவிப்பை வெளியிட்ட உடனேயே, இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா போர் அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து லெபனான் எல்லை கிராமங்கள், நகரங்களைச் சேர்ந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு செட்டிலர்கள் அங்கிருந்து கூட்டம் கூட்டமாக வெளியேறினர். சுமார் 1 லட்சம் ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேறியுள்ளனர்.
மத்திய இஸ்ரேலில் உள்ள சுமார் 315 ஹோட்டல்கள், 526 முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மாதம் மாதம் குடும்ப செலவுக்கு இஸ்ரேல் அரசு பணம் வழங்கி வருகிறது. தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இஸ்ரேல் அரசு, வரும் டிசம்பர் மாதம் வரை, இதற்கான நிதியை ஒதுக்கியுள்ளது. இதுகுறித்து கூறியுள்ள செட்டிலர்கள், வரும் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ள கல்வியாண்டில், தங்களது பிள்ளைகள் பள்ளியில் சேர வேண்டும் என்றும், இல்லாவிட்டால், அவர்களின் படிப்பு வீணாகிவிடும் என்றும், எத்தனை நாட்களுக்கு ஹோட்டல்களில் தங்குவது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதுகுறித்து இஸ்ரேலின் சேனல் 12 ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள, ஆக்கிரமிப்பு ராணுவத்தின் முன்னாள் மேஜர் ஜெனரல், “இஸ்ரேல் சிவ்” என்பவர், ஹிஸ்புல்லாவின் தாக்குதலால், இஸ்ரேல் முடமாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, வடக்கு எல்லையில் அமைதி திரும்ப வேண்டும் என்றும் அப்போது தான் ஈரானும் தனது தாக்குதலை குறைக்க வாய்ப்பு உருவாகும் என தெரிவித்துள்ளார்.
====