உலகத்தை மாற்றப் போகும் அடுத்த கண்டுபிடிப்பு! மார்க் சக்கர்பர்க் அறிவிப்பு!

மெட்டா அதிபர் மார்க் சக்கர் பர்க் கூறியுள்ள கருத்து உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆரம்பத்தில் தகவல் தொடர்புக்கு லேன்லைன் போன்களையும், பேஜர்களை பயன்படுத்தினோம். அதற்கு பிறகு மொபைல் போன்கள், இப்போது, ஸ்மார்ட் போன்கள். இந்த ஸ்மார்ட் போன்களுக்கு மனிதர்கள் அடிமையாகவே மாறிவிட்டார்கள்.ஆனால் இந்த அடிமைத்தனம் விரைவில் முடிவுக்கு வரும் என்கிறார் மார்க் சக்கர் பர்க்.மொபைல் போன்களின் இடத்தை, ஸ்மார்ட் கிளாஸ்கள் பூர்த்தி செய்யும் என்கிறார் அவர்.ஸ்மார்ட் கிளாஸ்கள் மூலம் தற்போது, நாம் மொபைல் போனில் என்னவெல்லாம் பயன்படுத்துகின்றோமோ, அவை அனைத்தையும் பயன்படுத்தலாம் என்கிறார்.
தற்போது, ஏ.ஐ. தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதால், அவற்றையும் இந்த ஸ்மார்ட் கிளாஸ்கள் மூலம் பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளார். இதற்காக மெட்டா சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்துள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 8 லட்சத்து 67 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.இந்த ஸ்மார்ட் கிளாஸ்களில், மொபைல் போன்களில் உள்ளது போன்ற, Texting, making calls, checking the news, navigating streets ஆப்சன்கள் உள்ளன