குட்டியை சேர்க்க மறுக்கும் தாய் – 8வது முறையாக இணைப்பு முயற்சி தோல்வி! காரணம் என்ன?

தாயிடம் இருந்து பிரிந்து சென்ற குட்டியானை…மீண்டும் சேர்த்துக்கொள்ள மறுக்கும் தாய்…
8வது முறையாக வனத்துறையின் முயற்சி தோல்வி…கோவை மருதமலை வனப்பகுதியில் குட்டிகளுடன் இருந்த தாய் யானை ஒன்று, உடல்நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்தது. இதனையடுத்து, வனத்துறையினரின் தீவிர முயற்சியின் பேரில், சிகிச்சை அளிக்கப்பட்டு, வந்தது. அப்போது தாய் யானையை சுற்றி, 3 மாதங்களே ஆன ஆண் குட்டி ஒன்று வட்டமடித்து வந்தது.
3 நாட்கள் தொடர்ந்து தாயுடன் இருந்த அந்த குட்டி, திடீரென, அதன் உடன் பிறந்த மற்றொரு குட்டியுடன் சேர்ந்து, வேறு ஒரு யானைக் கூட்டத்தில் இணைந்து கொண்டது.இந்நிலையில் உடல்நலம் தேறிய தாய் யானை, தானாக எழுந்து,வனம் பகுதிக்குள் வலம் வரத் தொடங்கியது. எதிர்பாரா திருப்பமாக, வேறு கூட்டத்தில் இணைந்த 3 மாத ஆண் குட்டி, திடீரென அந்த கூட்டத்தில் இருந்து பிரிந்து, தனியாக சுற்றிக் கொண்டிருப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர்.இது அந்த குட்டியானைக்கு ஆபத்தாக முடியும் என்பதால், அதனை தாய் யானையுடன் சேர்த்து வைக்க முயற்சித்தனர். ஆனால் தனது குட்டியை சேர்த்துக் கொள்ள, அந்த தாய் யானை தயாராகவில்லை.
இதனையடுத்து, வேறு யானைக் கூட்டங்களில் சேர்த்து வைக்க வனத்துறையினர் முயற்சித்தனர். 4 முறை முயற்சித்தும், அந்த குட்டியை வேறு கூட்டங்களை சேர்ந்த யானைகள் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டன.இதனையடுத்து, மீண்டும் மீண்டும் தாய் யானையுடன் சேர்த்து வைக்க வனத்துறையினர், அடுத்தடுத்து, முயற்சிகளை மேற்கொண்டும், அது நடக்கவில்லை.சனிக்கிழமை 8வது முறையாக முயற்சித்தும் தாய் யானை, குட்டியை சேர்த்துக் கொள்ளாததால், முதுமலை வன விலங்குகள் சரணாலயத்துக்கு குட்டியை வனத்துறையில் அனுப்பியுள்ளனர்.தாய் யானை ஏன் குட்டியை சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.