உலகம்

சேல்ஸ்மேனாக தொடங்கிய வாழ்க்கை… பல லட்சம் கோடி மதிப்புள்ள நிறுவனத்தின் தலைவர், கல்வியால் உச்சம் தொட்டு, அமெரிக்காவை கலக்கும் இந்தியர் அஜித் ஜெயின்!

ஒடிசாவின் கடைகோடி பகுதியில், கிறிஸ்தவ சேவை பள்ளியில் படிப்பு…சேல்ஸ்மேனாக தொடங்கிய வாழ்க்கை…
இன்று உலக பணக்காரர் வாரன் பபெட்டுக்கு அடுத்த இடத்தில் பெரும் பதவி…எளிய பின்னணியில் இருந்து சாதித்து காட்டிய அஜித் ஜெயின்…கல்வியால் உயர்ந்த எண்ணற்றவர்களில் மிக முக்கியமானவர் அஜித் ஜெயின். ஒடிசாவின் பின்தங்கிய நகரமான கட்டாக்கில் பிறந்தவர்.

அங்குள்ள கிறிஸ்தவ சேவை பள்ளியில் கல்வி கற்றவர். அதன் மூலம் ஐஐடி காரக்பூர் என்ற இந்தியாவின் உயர் கல்வி நிறுவனத்தில் பி.டெக் பட்டம் பெற்றார். இதனைத் தொடர்ந்து, IBM நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை செய்துள்ளார்.
அப்போது, அதாவது 1976ஆம் ஆண்டுதிடீரென அந்த நிறுவனம் தனது செயல்பாடுகளை இந்தியாவில் நிறுத்திக் கொண்டதால் வேலை இழந்துள்ளார்.அந்த வேலை இழப்பு அவருக்கு புதிய பாதையை காட்டியுள்ளது.

1978ஆம் ஆண்டு அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டு, அங்கு ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ பெற்று, பிரபல பன்னாட்டு நிறுவனமான McKinsey & Co வில் இணைந்துள்ளார்.பிறகு 1986 காலக்கட்டத்தில் உலகின் முன்னணி பன்னாட்டு கம்பெனியான வாரன் பபெட்டின், Berkshire Hathaway நிறுவனத்தின் காப்பீட்டு பிரிவில் இணைந்துள்ளார். அங்கிருந்து இவரது வளர்ச்சி மட்டுமல்ல, அந்த நிறுவனத்தின் வளர்ச்சியும் தொடங்கியது.

இன்று உலக பணக்காரர்கள் வரிசையில் வாரன் பஃபெட் 8வது இடத்தில் உள்ளார். அவரது சொத்து மதிப்பு சுமார் 133 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.இந்த நிறுவனம் இவ்வளவு தூரம் வளர்ந்ததற்கு காரணம் இந்தியரான அஜித் ஜெயின் என்றும் அவரது இடத்தை யாராலும் பூர்த்தி செய்ய முடியாது என வாரன் பஃபெட் பெறுமையாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வளவு தூரம் அஜித் ஜெயின் உச்சத்தை தொட அவரது பள்ளிப் படிப்பு அடிப்படை காரணமாக இருந்துள்ளது. அவர் படித்த கட்டாக் Stewart School எனப்படும் ஆங்கிலப் பள்ளி பல ஆளுமைகளை உருவாக்கியுள்ளது. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட இந்த பள்ளியில் படித்தவர்களில் முக்கியமானவர் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் ஆவார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button