உலகம்

காசாவில் உறங்கிக் கொண்டிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு வீரர் திடீர் மரணம்!

உறங்கிக் கொண்டிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படையினர் திடீரென துடிதுடித்து பலி…
விஷவாயு தாக்கி இறந்திருக்கலாம் என நெதன்யாகு அரசு சந்தேகம்…

தெற்கு காசாவில் ஒரு வீட்டை ஆக்கிரமித்து, அதனை ராணுவ தளமாக பயன்படுத்தி, அதில் உறங்கிய 3 இஸ்ரேல் படையினர் நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. அவர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலையில், அங்கு சென்று பார்த்தபோது, அவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது தெரிந்துள்ளது.

அவர்கள் 3 பேரையும் மீட்க முயன்ற போது, ஒருவர் ஏற்கனவே இறந்துள்ளார். 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அங்கிருந்து விமானம் மூலம் இஸ்ரேலுக்கு தூக்கிச் செல்லப்பட்டுள்ளனர்.

அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த அறையில் ஜெனரேட்டர் ஒன்று இயங்கிக் கொண்டிருந்ததால், அதில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி அவர்கள் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் ஆக்கிரமிப்பு படைகள் அறிவித்துள்ளன.

காசா மக்களுக்கு கடந்த 10 மாதங்களாக மின்சாரத்தை துண்டித்துள்ள இஸ்ரேல். ஜெனரேட்டர்களை கூட பயன்படுத்த முடியாதவாறு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் கிடைக்காமலும் தடுத்து வருகிறது.

ஆக்கிரமிப்பு படையின் உயிரிழப்பை தடுக்கவும் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த நிலையில், 3 பேர் மர்மமான முறையில் சுருண்டு விழுந்து, அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button