இஸ்ரேல் மீது ஈராக் குழு தொடர் தாக்குதல்! ஆக்கிரமிப்பு ராணுவ முகாம் மீது டிரோன் வீச்சு!

இஸ்ரேல் மீது தாக்குதலை அதிகப்படுத்தியுள்ள ஈராக் குழு…
2 நாட்களில் 4 முறை தாக்குதல்…
காசா மற்றும் லெபனான் மீது இஸ்ரேல் ஆக்கிரமிப்பு படைகள் தங்களது தாக்குதல்களை அதிகரித்துள்ள நிலையில், ஈராக் அரசு ராணுவத்தின் பிரிவான, கத்தீப் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீதான தாக்குதல்களை அதிகரித்துள்ளது.
செவ்வாய்கிழமை இஸ்ரேலின் Maalim ராணுவ முகாம் மீது ஆள் இல்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் வெளியிடப்படவில்லை.
முன்னதாக திங்கட்கிழமை ஒரே நாளில் 3 தாக்குதல்களை ஈராக் அமைப்பு நடத்தியுள்ளது. காசாவின் அல் மவாசி முகாம் மீது இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக அந்த அமைப்பு தெரிவித்தது.
கத்தீப் ஹிஸ்புல்லா என்ற அமைப்பு ஷியா பிரிவு போராளிக்குழு ஆகும். ஈராக் ராணுவத்தில் இந்த அமைப்பு ஒரு பிரிவாக செயல்படுவது குறிப்பிடத்தக்கது.
====