உலகம்

மனித குலத்தை உலுக்கிய சம்பவம்!

காசாவில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட, அல் மாவாசி அகதிகள் முகாம் மீது 2000 பவுண்ட் எடை கொண்ட அமெரிக்க வெடிகுண்டுகள் பலவற்றை இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு பயங்கரவாதப் படை வீசிய சம்பவம் உலகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 40 பாலஸ்தீனியர்கள் உடல் உருகி, கொல்லப்பட்ட நிலையில், 60 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

20 மீட்டர் ஆழத்திற்கு நிலம் குழியாக மாறியுள்ளது. இச்சம்பவம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் தலைகுனிய வைத்துள்ளது.தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் எடுக்கப்பட்ட வெடிகுண்டுகளின் உதிரி பாகங்கள் மூலம் இந்த ஆயுதம் அமெரிக்கவால், இஸ்ரேலுக்கு வழங்கப்படும் 2000 பவுண்ட் எடைகொண்ட, MK 84 வகை வெடிகுண்டுகள் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவ இடத்தில் நிலம் ஆழமாக்கப்பட்டதை பார்க்கும் போது, இந்த வகை குண்டுகள், பல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சிஎன்என் தொலைக்காட்சியின் டிரோவர் பால் தெரிவித்துள்ளார்.

இந்த வகை வெடிகுண்டுகள், அதன் வெப்பத்தால், மனிதர்களை உருக்கி, உருவமற்ற திரவமாக மாற்றிவிடும் நாசாகர தன்மை கொண்டவை.ஒரு கான்கீரிட் தளத்தை 11 அடி அளவுக்குக்கும், உலோக கவசங்களைக் 15 இஞ்ச் அளவுக்கு துளைத்து ஆழப்படுத்தி விடும். எவ்வளவு உயரத்தில் இருந்து வீசப்படுகின்றதோ, அதற்கேற்றார்போல் அதன் தாக்கம் மாறுபடும்.திறந்தவெளி நிலப்பகுதியில் 56 அடி அகலத்தையும், 36 அடி ஆழத்தையும் ஏற்படுத்தும்.

சுமார் 350 அடி சுற்றளவு பகுதிகளை, சிதறித் தாக்கும். சுமார் 800 மீட்டர் சுற்றவுக்கு பரவும் இதன் வெப்ப அலை, அதில் சிக்கும் மனிதர்களை உருக்கி, காயப்படுத்தும்.இந்த மோசமான குண்டுகளைத் தான் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடந்த 10 மாதங்களாக வழங்கி வருகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான், சிரியா நாடுகளிலும் இந்த குண்டுகளை அமெரிக்கா பயன்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button