ஹவுத்திக்களுக்கு பதிலடி கொடுக்கப்படும்! இஸ்ரேல் சூசக எச்சரிக்கை!

ஏமன் ஹவுத்தி ராணுவத்தின் அதிரடித் தாக்குதலால், நிலைகுலைந்துள்ளது இஸ்ரேல்.
டெல் அவிவ்வில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதி மீது, ஏமன் ஆள் இல்லா விமானம், தாக்குதல் நடத்தியது.
வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் நடைபெற்ற தாக்குதலுக்கு முன்பு, எந்த விதமான அபாய எச்சரிக்கை ஒலியும் எழுப்பப்படவில்லை.
இதனால் தூக்கத்தை தொலைத்த இஸ்ரேலியர்கள் விடியவிடிய சாலைகளில் கண் விழித்து காத்திருந்தனர்.
இது அந்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் தங்கள் நாட்டுக்கு எதிராக செயல்படும் அனைவரின் கணக்குகளும் தீர்க்கப்படும் என இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவ அமைச்சர் யோவ் கேலண்ட் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முன்னதாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு ராணுவ அதிகாரிகள், உளவுத்துறை அதிகாரிகள், ராணுவ தலைமைத் தளபதி ஹெர்சி ஹாலேவி உள்ளிட்டோரின் அவர் ஆலோசனை நடத்தினார்.
ஏமன் படைகள் நடத்திய தாக்குதலில், ஒருவர் கொல்லப்பட்டதோடு, 10 பேர் காயம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
டெல் அவிவ் நகரம் மீது ஏமன் படைகள் நடத்திய ஆள் இல்லா விமானத் தாக்குதல் – புதிய வீடியோ வெளியீடு!
New footage shows the Houthi drone attack on Tel Aviv early this morning. pic.twitter.com/aEuF8cjIwU
— Emanuel (Mannie) Fabian (@manniefabian) July 19, 2024