உலகம்

ஒரே நாளில் 4 கப்பல்களுக்கு குறி வைத்த ஹவுத்திக்கள் – இஸ்ரேலுக்கு முற்றும் நெருக்கடி!

ஒரே நாளில் 4 கப்பல்களுக்கு குறி வைத்த ஹவுத்திக்கள் –
இஸ்ரேலுக்கு முற்றும் நெருக்கடி!

ஈராக்கில் இருந்து செயல்படும் போராளிக்குழுக்களுடன் இணைந்து, இஸ்ரேலின் ஹைபா துறைமுகம் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தியதாக ஏமன் ஹவுத்திப்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த படையின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சரி கூறியுள்ளதாவது, 2 சிமெண்ட் சரக்கு கப்பல்கள் மற்றும் 2 கார்கோ கப்பல்கள் மீது டிரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் ஒரு கப்பலின் பெயர் Shorthorn Express.

இதனிடையே இஸ்ரேலின் சேனல் 12 வெளியிட்டுள்ள செய்தியில், ஹைபா துறைமுகம் அருகே தீ பற்றி எரிந்ததாக தெரிவித்துள்ளது. அதே நேரம் இதுகுறித்து முழுமையாக விளக்கம் அளிக்காத இஸ்ரேல் ஆக்கிரமிப்பு ராணுவம், வான் வழியாக வந்த தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாக மட்டும் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக பிரிட்டன் கடற்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் ஹவுத்திக்களின் தாக்குதலில் ஒரு கப்பல் சேதம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக சனிக்கிழமை இஸ்ரேல் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் ஒன்றை தகர்த்ததாக ஹவுத்திக்கள் கூறிய நிலையில், அதனை அமெரிக்கா மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button