டேங்கர் கப்பலை தகர்த்து மூழ்கடித்துள்ள ஹவுத்திக்கள்!

3வது கப்பலை மூழ்கடித்த ஹவுத்திக்கள்…
சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடவடிக்கை…
செங்கடல் கட்டுப்பாட்டை முற்றிலுமாக இழந்த அமெரிக்கா…
சிறிய இடைவெளிக்கு பிறகு, துல்லிய தாக்குதல் ஒன்றை நடத்தி, பிரமாண்ட டேங்கர் கப்பலை ஹவுத்திக்கள் தாக்கி மூழ்கடித்துள்ளனர். கிரிஸ் நாட்டு கொடியுடன் சென்ற டெல்டா நிறுவனத்துக்கு சொந்தமான Sounion என்ற கப்பல் செங்கடலில், 3முறை தொடர்ந்து தாக்கப்பட்டுள்ளது. சிறிய படகுகளில் சென்று, அந்தக் கப்பல் மீது ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.
தொடர்ந்து, வானில் இருந்து, ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல்களை, கப்பலின் பாதுகாப்பு படையோ, அல்லது செங்கடலில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க போர்க் கப்பல்களோ, தடுக்க முடியவில்லை.
இதனையடுத்து, அந்தக் கப்பல் மூழ்கத் தொடங்கியுள்ளது. அதில் இருந்தவர்கள் யாருக்கும் உயிரிழப்போ, காயமோ, ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த சம்பவத்திற்கு உடனடியாக ஹவுத்திக்கள் பொறுப்பேற்கவில்லை. எனினும், இது ஹவுத்தித் தாக்குதல் என பிரிட்டன் கடல் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 10 மாதங்களில் 2 கப்பல்களை ஹவுத்திக்கள் கடலில் மூழ்கடித்துள்ளனர். தற்போது, 3வது கப்பல் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. கப்பல் மூழ்குவதால், கடலில் செல்லும் இணையதள கேபிள்கள் சேதம் அடையலாம் என கூறப்படுகிறது.
காசா மீது இஸ்ரேல் தனது இனப்படுகொலைகளை நிறுத்தும் வரை, அமெரிக்கா, இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் செங்கடலில் தொடர்ந்து தாக்கப்படும் என ஹவுத்திக்கள் தெரிவித்துள்ளனர்.
===