ஏலத்திற்கு வந்த வீடு! அடுத்தடுத்து வெளியாகும் சோகச் செய்திகள்!

முதல் 7 டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் சதம் அடித்து, உலக கிரிக்கெட் ரசிகர்களையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் வினோத் காம்பிளி. புகழின் உச்சியில் இருந்த போது, பணத்தின் மீது ஆசைப்படாமல், சாதரண நிலையில் இருந்த, ஹோட்டல் ரிசப்ஷனிஸ்ட் Noyall Lewis என்ற பெண்ணை திருமணம் செய்தார். அவர் நினைத்திருந்தால், பெரும் பணக்கார பெண்ணை திருமணம் செய்து, வாழ்க்கையில் செட்டில் ஆகி இருக்க முடியும்.முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தாலும், காம்ப்பிளியிடம் இருந்த சொத்து மதிப்பின் காரணமாக அவர் 2வதாக திருமணம் செய்த பெண், மாடல் அழகி ஆண்ட்ரியா ஹெவெய்ட் என்பவரை மணந்தார்.தனது மனைவிக்காக மும்பையில் 2012ஆம் ஆண்டு 1.5 கோடி ரூபாய் மதிப்பில், பிரமாண்ட சொகுசு வீட்டை வாங்கினார். ஆனால் அப்போதே அவருக்கு பணம் பிரச்னை இருந்ததால், சுமார் 50 லட்சம் தனியார் வங்கி ஒன்றில் கடனாக பெற்றுள்ளார்.
இதற்கிடையே அவரது உடல்நிலை மற்றும் குடும்ப சூழல் மாறியது. இரண்டாவது மனைவியும் அவர் மீது குடும்ப வன்முறை புகார் அளித்தார். காம்பிளியின் உடல்நிலை மறுபக்கம் மோசமாகிக் கொண்டே சென்றுள்ளது.இந்தச் சூழ்நிலையில், அண்மையில் காம்பிளி வீட்டுக் கடன் இஎம்ஐ கட்டவில்லை எனக் கூறி, வீட்டை ஏலத்தில் விடும் நோட்டீஸை வங்கி வெளியிட்டுள்ளது. கடன் செலுத்தாதவர்கள் பட்டியலிலும் அவர் பெயர் வந்துள்ளது. இந்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.தற்போது கூட, காம்பிளியின் வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் முழுமையாக செலுத்தப்பட்டு விட்டதாக தெரியவில்லை என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த சூழலுக்கு முழுக்க முழுக்க அவரது குடி பழக்கமே காரணம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதே நேரம் கோடிகளில் புரளும் சக கிரிக்கெட் வீரர்கள் அவரை ஓரளவு அரவணைத்து, தேற்றி, காப்பாற்றி இருக்கலாம். தற்போது, அவருக்கு உதவ பலரும் முன்வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.