விளையாட்டு
பாகிஸ்தான் ஜாம்பவான்களை கடுமையாக விமர்சித்த முன்னாள் கேப்டன்.

சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணியின் மோசமான தோல்விக்குப் பிறகு, முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியை விமர்சித்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் வாசிம் அக்ரம் மற்றும் வக்கார் யூனிஸை மறைமுகமாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் விமர்சித்துள்ளார்.
போட்டியின் போது ஒளிபரப்பு நிகழ்ச்சிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தங்கியிருந்ததால், அக்ரம் மற்றும் யூனிஸை “துபாய் கே லாண்டே” “துபாயைச் சேர்ந்த சிறுவர்கள்” என்று குறிப்பிட்டு, அக்ரமும் யூனிஸும் “பணத்திற்காக எதையும் செய்வார்கள்” என்று லத்தீஃப் மறைமுகமாகக் சாடியுள்ளார்,90களின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட்டிலிருந்து விலகி இருக்க வேண்டும் , அவர்களின் ஈடுபாடு அணியின் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பதாகவும் லத்தீஃப் முன்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.