காது கிழிந்தது! ரத்தம் சொட்ட சொட்ட காப்பற்றப்பட்ட டிரம்ப்! குற்றவாளி யார்?

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை கொல்ல முயற்சி…
காதை கிழித்துச் சென்ற புல்லட்…
குற்றவாளி டொனால்டு டிரம்பை கட்சியை சேர்ந்த வெள்ளையர் எனத் தகவல்…
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளார் டொனால்டு டிரம்ப். இந்த நிலையில், அவர் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென சீறிப்பாய்ந்து வந்த தோட்டா ஒன்று, அவரது காதின் மேற்புறத்தை கிழித்துக் கொண்டு சென்றது.
இதனால் பெரும் அமளி துமளி ஏற்பட்ட நிலையில், பாதுகாவலர்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர். இதில் கொலை கும்பலைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயத்துடன் மீட்கப்பட்ட டொனால்டு டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக இந்த திட்டத்தை தீட்டியவர் பெயர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பதும், இவர் டொனால்டு டிரம்பின் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இவர் அமெரிக்காவின் லிபரல் அமைப்புகளுக்கு 15 டாலர் நிதி வழங்கியதும் தெரியவந்துள்ளது.
டொனால்டு டிரம்ப் பேசிக் கொண்டிருந்த இடத்திற்கு வெளியே உள்ள ஒரு கட்டிடத்தின் கூரை மீது ஏறி, இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டிரம்ப்பை குறிவைத்து, 5 முறை சுடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
====