உயிரிழந்த தொழிலாளி – தோளில் சுமந்து சென்ற உலக பணக்காரர் யூசுப் அலி!

கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலி, தொடர்ந்து செய்து வரும் மக்கள் பணிகளால் அறியப்படுகிறார். இந்நிலையில் அவரது அபுதாபி லுலு மாலில் பணியாற்றிய கேரள மாநிலம் திரூரைச் சேர்ந்த ஷிகாபுதீன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார்.அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு, அவருக்கு இறுதித் தொழுகை நடத்தியுள்ளார் தொழிலதிபர் யூசுப் அலி. மேலும் தொழிலாளியின் சவப்பெட்டியை சுமந்து சென்று, நல்லடக்கம் செய்துள்ளார்.சுமார் 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துக்கு சொந்தக்காரான யூசுப் அலி, எப்போதும், உலகின் பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், முதலமைச்சர்கள், பிரதமர்கள், அதிபர்கள் என பலரை சந்தித்து, தொழிலின் அடுத்தடுத்த வளர்ச்சியை நோக்கி ஓடிக் கொண்டிருப்பவர்.
இத்தகைய கடும் பணிச்சுமைக்கு நடுவே, அவர் தனது சொந்த மாநிலமான கேரளாவிற்கு செல்வதையோ, சொந்த ஊருக்கு செல்வதையோ ஒரு போதும் நிறுத்துவதில்லை.குறிப்பாக தொழிலாளிகளின் இல்லங்களில் நடைபெறும் சுக துக்க நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொள்பவர் ஆவார்.அவரது தற்போதைய செயல்பாடு, சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.முதலாளிகள் இவரை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என வலைதள வாசிகள் பாராட்டி வருகின்றனர்.