சினிமா

லியோவிடம் தோற்ற கோட்! நட்டத்தில் இருந்து மீள போராட்டம்!

கோட் திரைப்படம் உலக அளவில் 303 கோடி ரூபாயை வசூலை கடந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 6 நாட்களில் இந்தியாவில் மட்டும் 178 கோடி ரூபாயும், வெளிநாடுகளில் 125 கோடி ரூபாயும் வசூலித்து, உலக அளவில் மொத்தம் 303 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.லியோவிற்கு பிறகு, 300 கோடி ரூபாயை கடந்த விஜய் படமாக கோட் அமைந்துள்ளது.

லியோ உலக அளவில் 606 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. வாரிசு திரைப்படம் 297.50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியது.சனி, ஞாயிறு நாட்களில் 90 சதவீத இருக்கைகள் நிரம்பிய நிலையில், திங்கட் கிழமை 50 சதவீத இருக்கைகளும், செவ்வாய்கிழமை வெறும் 25 சதவீத இருக்கைகள் மட்டுமே நிரம்பியுள்ளன.

மேலும் முதல் 6 நாட்கள் வசூலில் லியோவைவிட குறைவான தொகையையே கோட் வசூலித்துள்ளது. எனினும் தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி வருவதால், எதிர்வரும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சற்று நல்ல வசூலை ஈட்டும் என நம்பப்படுகிறது.இந்த படம் 380 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட நிலையில், வசூல் 303 கோடி மட்டுமே வந்துள்ளது. இதுவும் படக்குழுவை வருத்தமடையச் செய்துள்ளது.

இதனிடையே தெலுங்கு மற்றும் இந்தியில் படம் எதிர்பார்க்கப்பட்ட வசூலை குவிக்காததற்கு காரணம் சிஎஸ்கே, அணியை புகழ்ந்து எடுக்கப்பட்ட காட்சிகள் என இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.சிஎஸ்கே தங்களது ரத்தத்தில் இருப்பதாகவும், இதனால் பெங்களூரு, மும்பை ரசிர்கள் படத்தை டிரோல் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அப்பகுதிகளில் போதிய வசூலை ஈட்டாமல் போய் இருக்கலாம் என கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button