கங்கனாவை கன்னத்தில் அப்பு விட்ட, CISF காவலருக்கு 8 கிராம் தங்க மோதிரம் பரிசு – தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு!

கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அரை விட்ட காவலருக்கு குவியும் பரிசுகள்…8 கிராம் தங்க மோதிரம் வழங்க உள்ளதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு…விவசாயிகளுக்கு ஆதரவாக நிற்பதை பாராட்டி பரிசு என விளக்கம்…விவசாயிகள் விரோத வேளாண் சட்டத்தை எதிர்த்து, டெல்லியில் அற வழியில் போராட்டம் நடத்திய விவசாயிகளை தீவிரவாதிகள் என விமர்சித்திருந்த, பாஜக நடிகை கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அடித்து, தனது எதிர்ப்பை தெரிவித்தார் மத்திய தொழில் பாதுகாப்புப் படை காவலர் குல்விந்தர் கவுர்.
இதனையடுத்து உடனடியாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதோடு, வேலையில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.அதே நேரம் விவசாயிகள் தரப்பில் இருந்தும், பாஜக எதிர்ப்பாளர்கள் தரப்பில் இருந்தும் குல்விந்தர் கவுருக்கு ஆதரவுகள் குவிந்து வருகின்றன.பிரபல பாலிவுட் பாடகர் vishal dadlani என்பவர், குல்விந்தர் கவுருக்கு வேலை வழங்க தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.மொஹாலியைச் சேர்ந்த தொழில் அதிபர் Shivraj Singh Bains என்பவர் ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்குவதாக அறிவித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த, தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அந்த பெண்ணின் விவசாயிகள் மீதான அக்கறையை பாராட்டி, பெரியார் படம் பொறித்த, 8 கிராம் தங்க மோதிரம் பரிசளிக்க உள்ளதாக அதன் பொதுச் செயலாளர் கோவை. ராமகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.அந்த காவலரின் வீட்டு முகவரிக்கு தங்க மோதிரம் மற்றும் பெரியாரின் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என கோவை ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.வீட்டு முகவரிக்கு அனுப்ப முடியாவிட்டால், தந்தை பெரியார் திராவிட கழக நிர்வாகி, ரயில் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ, நேரடியாக சென்று, அதனை அந்த காவலரிடம் வழங்குவார் என ராமகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.