உலகம்

நீண்ட நாட்களுக்கு பிறகு மிகப்பெரிய சம்பவம் – கொத்து கொத்தாக வீழ்ந்த இஸ்ரேல் படை!

பாலஸ்தீன குழுவின் மிகப்பெரும் நடவடிக்கை…
கொத்து கொத்தாக மடிந்த படையால் இஸ்ரேலில் கடும் கொந்தளிப்பு…
புள்ளி விபரங்களை வெளியிட்ட ஆக்கிரமிப்பு ஊடகங்கள்…

வெள்ளிக்கிழமை அதிகாலை ஹமாஸ் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின் விளைவாக இஸ்ரேலில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பற்றிய உண்மைகளை, இஸ்ரேல் ஊடகங்கள் சனிக்கிழமை இரவு வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

வெள்ளிக்கிழமை அதிகாலை காசா சிட்டியின் அல் சைத்தூன் பகுதியில், ஒரு கட்டிடத்திற்குள் நுழைய முயன்ற இஸ்ரேல் படையை தாக்கியதாக ஹமாஸ் அறிவித்தது. ஆனால் எத்தனை பேர் உயிரிழந்தார்கள், அல்லது காயம் அடைந்தார்கள் என்பது பற்றி தெரியவில்லை என்றும் அதே நேரம் அவர்களை தூக்கிச் செல்ல ராணுவ ஹெலிக்காப்டர்கள் வந்ததாகவும் ஹமாசின் ராணுவ ஊடகம் குறிப்பிட்டிருந்தது. வழக்கம் போல் இந்த சம்பவத்தின் பின்னணியை இஸ்ரேல் ராணுவம் வெளியிடவில்லை.

அதே நேரம் இஸ்ரேலின் ஒரு மருத்துவமனையில் பல வீரர்கள் ஒரே நேரத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பல உடல்கள் கொண்டு வரப்பட்டதாகவும் செய்திகள் வெளியான நிலையில், அதுகுறித்த தகவல்களை ராணுவம் வெளியிடாமல் மறைப்பதாக ஆக்கிரமிப்பு ஊடகங்கள் குற்றம் சாட்டின. இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் வெள்ளிக்கிழமை அல் சைத்தூன் பகுதியில் நடந்த சம்பவங்களை கட்டாயத்தின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

ஒரு கட்டிடத்திற்குள் இஸ்ரேல் படையினர் 10 பேர் நுழைய முயன்றுள்ளனர். அப்போது, அங்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் படுகாயம் அடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில், கீழே விழுந்துள்ளனர். 3 பேர் நடுத்தர காயம் அடைந்து வீழ்ந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மற்றும் உடல்களை தூக்கிச் செல்ல ஆக்கிரமிப்பு ராணுவ ஹெலிக்காப்டர்கள் அங்கு வந்துள்ளன.

ஆனால் அதனை தொலைவில் இருந்து யாரும் வீடியோ எடுக்கக் கூடாது என்பதற்காக, சேதத்தை மறைக்க, அப்பகுதியைச் சுற்றிலும், கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், சிறிய ரக குண்டுகளை மண்ணில் போட்டும், புளுதியை கிளப்பியுள்ளது இஸ்ரேல் படை. இருப்பினும் இந்த விவகாரம் தற்போது அம்பலமாகியுள்ளது.

மேலும் கட்டிடத்திற்குள் கேமராவை பொருத்தி வைத்து, சரியாக இஸ்ரேல் படை உள்ளே நுழைந்த உடன் அதனை ரிமோட் மூலம் ஹமாஸ் படை வெடிக்கச் செய்துள்ளதாகவும் இஸ்ரேல் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஒரே இடத்தில் 10 பேர் மீது குறிவைத்து தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக வியாழக்கிழமை இஸ்ரேலின் மெர்க்காவா டாங்கியை ஹமாஸ் படையினர் தகர்த்த சம்பவத்தில் ஒரு ஆக்கிரமிப்பு வீரர் கொல்லப்பட்டார். இதுமட்டுமின்றி காசாவின் பிற பகுதிகளில் ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன குழுக்கள் நடத்திய தாக்குதலில் தங்கள் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதாக ஆக்கிரமிப்பு படைகள் அறிவித்திருந்தன. இதனால் கடந்த சில தினங்களில் மட்டும் இஸ்ரேல் படையில் 5 கொல்லப்பட்டுள்ளதுடன், சுமார் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.

அதே நேரம் ஹமாஸ் அமைப்பு தங்கள் தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேல் படையினரின் எண்ணிக்கை, அவர்கள் காட்டும் கணக்கை விட பல மடங்கு இருக்கும் என தொடர்ந்து கூறி வருகிறது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button