சினிமா

பரிசாக வந்த 3 கிராமங்கள் – வேண்டாம் என மறுத்த பாகவாதர்! நேருவையே மிரள வைத்த தமிழ் ஆளுமை!

இன்னைக்கு இருக்கிற ஒரு சில சூப்பர் ஸ்டார்கள் ஓசில பெனாயில் கிடைச்சாலும் விட மாட்டாங்க… ஆனா இந்த மனுஷன் அரசாங்கம் கொடுத்த 3 கிராமங்கள வேணாம்னு சொல்லி இருக்கிறாரு.அது மட்டுமில்ல தன்னுடைய சொத்துக்கள ஏழை எளிய மக்களுக்கு வாரி வாரி வழங்கி இருக்காரு. அவர் தான் தியாகராஜ பாகவாதர்.
அவரோட நல்ல மனசு பத்தி பார்க்கிறதுக்கு முன்னால, நம்ம q7 சேனலை சப்ஸ்கிரைப் பண்ணலனா சப்ஸ்கிரைப் பண்ணிகோங்க…இப்போ வீடியோவுக்குள்ள போகலாம்.நம்ம பாகவாதர்கிட்ட அவரோட ஃபிரண்ட் ஒருத்தர், உதவி கேட்டு போயிருக்காரு. அப்ப வீட்ல ஒரே க்ரவுட். இதுனால உதவி கேட்டு போன நண்பர், பலருக்கு முன்னால கடன் கேட்க வெட்கப்பட்டு, கேட்காமலேயே அங்கிருந்து கிளம்பியிருக்காரு. இத பார்த்த பாகவாதர், போனவர நிறுத்தி, ஒரு புக்க கையில கொடுத்து, 25ஆம் பக்கம் பாருங்க, ஒரு முக்கியமான விசயம் இருக்குனு சொல்லி இருக்காரு.

அந்த நண்பரும், அப்படி என்ன முக்கியமான விசயம் இருக்க போகுதுனு வீட்டுக்கு போய், அந்த புத்தகத்தை எடுத்து பார்த்தப்போ, 25ஆம் பக்கம் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்துக்கு… ஆகா. என்னா மனுசன்டா… நாம கேட்காமலேயே, நாம இதுக்கு தான் வந்தோம்னு தெரிஞ்சு கொடுத்திருக்காரேனு பூரிச்சு போய்டாராம்.இந்த பிரிட்டிஷ் காரனுங்க, நம்மல அடிமைப்படுத்தி வச்சிருந்ததும் இல்லாம, 2ஆம் உலகப்போருல பிரிட்டனுக்கு ஆதரவாக சண்ட போட நம்ம இந்தியர்களையும் கூட்டிட்டு போனாங்க… அது மட்டுமில்லாம நிதி திரட்டி கொடுக்கனும்னு டார்ச்சர் பண்ணாய்ங்கா.. இப்படியெல்லாம் செஞ்சாத் தான் விடுதலை தருவோம்னு ஆசையும் காட்டினாங்க… இதையும் நம்பி நம்ம பல தலைவர்கள், விடுதலை வேணும் என்பதால வெள்ளைக்காரன்களுக்கு வேற வழி இல்லாம உதவியும் செஞ்சாங்க… காந்தியே இதனை ஆதரிக்கவும் செஞ்சாரு.

நம்ம தியாராஜ பாகவாரும், தீவிர காந்தி பக்தர். இதனால, பிரிட்டிஷ்காக நிதி திரட்டி கொடுத்திருக்காரு. இதுக்கு பரிகாரமா, 3 கிராமங்களை பிரிட்டிஷ் அரசு கொடுத்திருக்கு… அப்படியே அந்த 3 ஊரையும் லவடிட்டு வந்திடாம… இதெல்லாம் எனக்கு வேணாம்னு சொல்லிட்டாரு. நீங்க எங்கள அடிமைப்படுத்தி வச்சிருக்கீங்க… விடுதலை தற்றோம்னு சொன்னதால, நிதி திரட்டி கொடுத்தேன். எனக்கு இது சுத்தமா பிடிக்கலைனாலும் நாட்டுக்காகத்தான் நான் இதை செஞ்சேன். இப்போ, நீங்க கொடுக்கிற இந்த கிராமத்தை நான் வாங்கிட்டேனா, அது நான் என் வீட்டுக்காக உங்களுக்கு நிதி திரட்டி கொடுத்த மாதிரி ஆகிடும்னு சொல்லி, அந்த 3 கிராமங்கள வாங்க மறுத்தாராம் பாகவாதர்.

இன்னைக்கு உண்மையான சம்பளத்த மறைச்சு வரி ஏய்ப்பு செய்யிற சில நடிகர்களுக்கு மத்தியில, நாட்டுக்காக வேண்டி, இப்படியும் ஒரு நடிகன் அந்த காலத்தில இருந்திருக்காரு… அதனால தான் நாம அவர பத்தி இப்பவும் பேசறோம்….
ஒரு நாள் தியாகராஜ பாகவாதர் வீட்டுக்கு வந்த அவருடைய முஸ்லீம் ஃபிரெண்ட் ஒருத்தர், பாகவாதரே, என்னோட ரெண்டு பையனுக்களும், நான் சொல்றதே கேட்க மாட்றாங்க.. சண்டை போட்டிட்டே இருக்காங்க… அதனால அந்த ரெண்டு ராஸ்கல்களுக்கும் என்னோட சொத்தில இருந்து ஒரு பைசா கூட கொடுக்க மாட்டேன். நீங்க தான் நிறைய பேருக்கு நல்லது பண்றீங்க. அதுனால என்னோட சொத்த நீங்களே வச்சுங்கோங்கனு சொல்லி, அந்த மனுஷன் பாகவாதர் பேருல எழுதியும் வச்சிட்டாராம்.

இந்த நிலைல அந்த முஸ்லீம் பெரியவர் கொஞ்ச நாள்ளலேயே திடீரென இறந்து போயிட்டாரு. இதனால் அதிர்ச்சியடைந்த பாகவாதர், அந்த ரெண்டு பசங்களயும் கூப்பிட்டு, உங்க அப்ப என்னோட பெயர்ல உங்களுக்கு தெரியாம சில சொத்துக்கள எழுதி வச்சிட்டு போய்ட்டாரு. உங்கள மேல இருந்த கோவம் நாள அப்படி செஞ்சிட்டாரு. அந்த சொத்துக்கள நானே உங்களுக்கு சரியா அதை பிரிச்சு தற்றேனு சொல்லி, அதை பிரிச்சும் கொடுத்திருக்காரு பாகவாதர்.ஒரு முறை கச்சேரிக்கு சென்ற பாகவாதர், நிகழ்ச்சி ஏற்பாட்டாள அழைச்சு, தம்பூரா வாசிக்கிற கலைஞர நீக்கிட்டு, வேறு ஒருத்தர போடுங்க… ஆனா நிகழ்ச்சி முடியர வர அவர இங்கேயே இருக்கச் சொல்லுங்கனு சொல்லிட்டு போய்ட்டாரு. யாருக்கும் ஒன்னும் புரியல. நிகழ்ச்சி முடிஞ்சதுக்கு பிறகு, அந்த தம்பூரா கலைஞர அழைச்சு, நிகழ்ச்சி மூலமா தனக்கு கிடைச்ச சம்பள காசு அனைத்தையும் அந்த கலைஞருக்கே வழங்கிட்டாரு.

ஏன்னா அந்த தம்பூரா கலைஞர் ஒரு காலத்தில, நம்ம பாகவாதருக்கு சீனியராம். அதனால, தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த குரு, தனக்கு கீழ வேலை செய்யறது, வேதனையாக இருக்குனு சொல்லி, இப்படி ஒரு நல்ல விசயத்தை செஞ்சிருக்காரு பாகவாதர்.இப்படி தனக்கு வந்த பணம், பொருள்னு பல விசயங்களை வாரி வாரி வழங்கியவர் தான் பாகவாதர்.இந்தியாவிலேயே நம்ம மகாத்மா காந்திக்கு அடுத்தபடியாக அதிகமான மக்கள் கூட்டம் கூடியதுனா அது நம்ம தியாராஜ பாகவாதருக்குத் தான்.அந்த டைம்ல காந்திக்கு அடுத்த பெரிய நேஷனல் லீடர்னா அது நம்ம ஜவஹர்லால் நேரு தான்.ஒரு முறை திருச்சில நடந்த காங்கிரஸ் ஊர்வலத்துல நேரு, காமராஜர்லாம் கலந்திட்டு இருந்திருக்காங்க… நேருவுடைய அந்த ஊர்வலத்துல பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டு, நேருவுக்கு பின்னால கூட்டமா நடந்து வந்தாங்கலாம்.

ஒட்டுமொத்த தமிழ்நாடும் நம்ம பின்னால தான் வந்திட்டு இருக்குனு நேரு நினைச்சிருக்காரு,. ஆனா, தியாகராஜ பாகவாதர் வீட்டுக்கு பக்கத்துல போகும் போது, அதை விட பெரிய கூட்டம் அங்க அவர பார்க்கிறதுக்காக நின்னிட்டு இருந்ததாம்.இத பார்த்து ஷாக் ஆன நேரு, மிஸ்டர் காமராஜ் Who is this personனு கேட்டிருக்காரு. அதுக்கு காமராஜர் சொல்லி இருக்கிறாரு. இவர் தான் தியாராஜ பாகவாதர். இங்க பெரிய நடிகர். இங்க இவருக்குத் தான் அதிக கூட்டம் கூடும்னு சொல்லிருக்காரு காமராஜர்.நேருவை வரவேற்க காத்திருந்த பாகவாதர், மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி இருக்காரு. அதுக்கு பிறகு ஊருக்கு போன நேருக்கு உறுத்திட்டே இருந்துருக்கு… மனுஷன் யாரு, நம்மல விட அதிக கூட்டம் சேர்த்து வச்சிருக்கானே, எதுக்கு ஒரு பிட்ட போட்டு வைப்போம்னு, காமராஜர்க்கு போன் பண்ணிய நேரு, மிஸ்டர் காமராஜ், அந்த திருச்சி நடிகரை கட்சில சேர சொல்லுங்க, என்ன பதவி வேணுமானாலும் கொடுக்கலாம்னு சொல்லிருக்காரு…

அதுலாம் சரிதான், ஆனா அவரு என்ன சொல்றாருனு கேக்கனும்மில்லையானு, பாகவாதர்கிட்ட, ஆஃபர் பற்றி சொல்லி இருக்கிறாரு. காமராஜர்.இத கேட்ட பாகவாதர் அய்யா சாமி ஆள விடுங்க… எனக்கு திமுக தலைவர் அண்ணாவும், தி.க. தலைவர் பெரியாரும் நல்ல நண்பர்கள். நான் உங்க கட்சில வந்து சேர்ந்தன்னா, அவங்க கோவிச்சுக்குவாங்க… இது நமக்கு ஒத்து வராது. நான் பொது ஆளவே இருந்துட்டு பேறேனு சொல்லிட்டாராம்.இதுமாதிரி மேலும் பல சுவாரஸ்மான வீடியோக்களை பார்க்க நம்ம Q7 சேனல சப்ஸ்கிரைப் பண்ணுங்க… நன்றி…

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button