போலே பாபாவின் பேனர்கள் கிழிப்பு – பக்தர்கள் ரியாக்ஷன்!

போலே பாபா பக்தர்கள் இடையே பிளவு…பாவின் பேனர்கள் மீது கல்வீசி எதிர்ப்பை தெரிவிக்கும் ஒரு தரப்பு பக்தர்கள்…
பாபாவின் மீது எந்தத் தவறும் இல்லை என மற்றொரு தரப்பினர் கருத்து…உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராசில் சுமார் 120க்கும் மேற்பட்டோரை பலி கொண்ட ஆன்மீக நிகழ்ச்சி நெரிசலை தொடர்ந்து, போலே பாபா மீது ஒரு தரப்பு பக்தர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரது பேனர்கள் மீது சில பக்தர்கள் கல்வீசி தாக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.
அதே நேரம் பி.டி.ஐ. ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ள பக்தர் ஒருவர் கூறும் போது, அவர் சாதாரண பாபா அல்ல. அவர் கடவுளின் அவதாரம். அவரை பார்ப்பதே நாங்கள் செய்த பெரிய பாக்கியம். நேற்று நடைபெற்ற நிகழ்வு உட்பட அனைத்தும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட ஒன்று. பாபா மீது எந்தத் தவறும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் இவ்வளவு பெரிய சம்பவத்துக்கு பிறகும், போலே பாபாவை ஒரு தரப்பு பக்தர்கள் ஆதரிப்பது தெரியவந்துள்ளது.
இதனிடையே தனது காலடி மண்ணை எடுத்து, நோய் வாய்ப்பட்டவர்களின் நெற்றியில் பூசினால், அந்த நோய் குணமாகும் என கூறி வந்திருக்கிறார். எனவே அவர் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை என இந்தியா டுடே பத்திரிக்கையாளர் சினேகா மொர்தானி கேள்வி எழுப்பியுள்ளார்.