வரிகளை தளர்த்திய நிர்மலா – ஒரே நாளில் டாடா பெற்ற லாபம் 19,000 கோடி!

தங்கத்தின் மீதான சுங்க வரியை குறைத்த நிர்மலா…
ஒரே நாளில் 19,000 கோடி லாபம் பெற்ற தொழிலதிபர் டாடா…
அம்பானி, அதானியை தொடர்ந்து, டாடா காட்டிலும் பண மழை…
ஜியோ கட்டணங்களை உயர்த்தி, கல்யாண செலவை ஈடுகட்டினார் முகேஸ் அம்பானி. இந்த நிலையில், பட்ஜெட்டில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா, தங்கத்தின் மீதான சுங்க வரியை 15 சதவீதத்தில் இருந்து, 6 சதவீதமாக குறைத்திருப்பது, பெரும் பண முதலைகளுக்கு மேலும் உற்சாகமாக அமைந்துள்ளது.
டாடா நிறுவனம் Tanishq என்ற தங்க நகை ஷோரூம்களை நடத்தி வருகிறது. இந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 6 சதவீதம் உயர்ந்துள்ளன. இதனால் டாடாவுக்கு 19,000 கோடி ரூபாய் ஒரே நாளில் லாபம் கிடைத்துள்ளது.
ஒரு பங்கின் விலை 3252ஆக இருந்த நிலையில், ஒரே நாளில் 6.63 சதவீதம் உயர்ந்து, 3468 ஆக நிறைவு பெற்றது.
இதன் மூலம் சுமார் 32 லட்சம் ரூபாய் முதலீடு செய்த ஒருவர், ஒரே நாளில், லாபம் மட்டும் 2 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் லாபம் பெற்றுள்ளார். இது Tanishq இல் முதலீடு செய்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதேப் போல, டாடா Tanishq நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு 2 லட்சத்து 88 ஆயிரம் கோடி ரூபாயில், இருந்து, 3 லட்சத்து 7 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே நாளில் 19 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
====