ஹவுத்திப் படைகளை ஒடுக்க பல ஆயிரம் கோடி செலவு செய்தும் தோற்ற அமெரிக்கா!

ஏமன் படைகள் மீது 800 ஏவுகணைகளை வீசியுள்ள அமெரிக்கா…
ஒரு ஏவுகணையின் விலை மட்டும் 33 கோடி ரூபாய்…
பல ஆயிரம் கோடி செலவு செய்தும், ஹவுத்திக்களிடம் தோற்ற அமெரிக்கா…
ஏமன் ஹவுத்திப் படைகளை குறிவைத்து இதுவரை அமெரிக்கா, 800 ஏவுகணைகளை வீசியுள்ளது. 7 முறை விமானத் தாக்குதல் நடத்தியுள்ளது. Carrier Strike Group 12 என்ற விமானங்கள் தாங்கிய பிரமாண்ட போர்க்கப்பலை செங்கடல் அருகே நிறுத்தியுள்ளது. மேலும் ஏராளமான சிறிய ரக போர்க்கப்பல்கள், மீட்புக் கப்பல்கள், உதவிக் கப்பல்களை நிறுத்தியுள்ளது.
அமெரிக்க வீசியுள்ள மிசல்ஸ்களில் Tomahawk என்ற தரையில் இருந்து தரை இலக்குகளை தாக்கும் மிசல்ஸ்களின் எண்ணிக்கை மட்டும் 135. இந்த மிசல்ஸ்கள் ஒன்றின் விலை மட்டும் சுமார் 4 மில்லியன் அமெரிக்க டாலர்கள். 135 மிசல்ஸ்களின் தோராய விலை 540 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும்.
இந்திய மதிப்பில் சுமார் 4 ஆயிரத்து 531 கோடி ரூபாய் ஆகும். இந்த தொகை வெறும் 135 Tomahawk வகை மிசல்ஸ்களுக்கு மட்டும் செலவான தொகை ஆகும். மீதம் உள்ள சுமார் 665 மிசல்ஸ்கள், போர்க்கப்பல் செலவுகள், போர் விமான செலவுகள், வானில் இருந்து வான் இலக்குகளை தாக்கும் மிசல்ஸ்களின் செலவுகள் என கணக்கு பார்த்தால், ஒரு பெரும் போரையே நடத்தி முடிக்கும் அளவிலான தொகையை, அமெரிக்கா, ஏமன் படைகளுக்கு எதிராக செலவிட்டுள்ளது.
ஆனாலும் ஏமன் படைகள் தொடர்ந்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் இஸ்ரேல் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை தாக்கி வருகின்றனர். ஏமன் படைகளின் ஆயுத வலிமை, தங்குதடையற்ற ஆயுத சப்ளை போன்றவை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஹவுத்திக்களின் விலை குறைந்த டிரோன்களை சுட்டு வீழ்த்த, அதை விட பல நூறு மடங்கு விலை கொண்ட ராக்கெட்டுகளை அமெரிக்க பயன்படுத்துவதும் தெரியவந்துள்ளது. மேற்கண்ட தகவல்களை பொலிட்டிக்கோ இணையதளம் வெளியிட்டுள்ளது.
====