
காஷ்மீர் மக்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக சர்ச்சை…
இருந்தும் அமரன் திரைப்படத்தை பார்த்து பாராட்டிய சீமான்…
அமரன் திரைப்படத்தை பார்த்த சீமான், வெகுவாக பாராட்டியுள்ளார். அங்கு அவர் பேசும் வீடியோவை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது. அதில் பேசியுள்ள சீமான், ஒரு சிறு குறை கூட சொல்ல முடியாத அளவிற்கு மிகச்சிறந்த படைப்பு அமரன் என்றும், கமல்ஹாசன் தயாரித்த ஆகச் சிறந்த படைப்புகளில் இது முக்கியமான ஒன்று என கூறியுள்ளார். பிறகு கமல்ஹாசனிடம் தொலைப்பேசியில் பேசும் சீமானி, இதயத்தை பிடித்து இழுத்தது என்றும் அழாமல் யாரும் வெளியே வர முடியாது என்றும் கூறியுள்ளார்.
சீமானின் இந்த கருத்து சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. சீமான் ஒரு திரைப்படத்தை, அதன் படமாக்கல் தரத்தை வைத்துத் தான் ஆதரிப்பாரா, பார்த்து தான், ஆதரிப்பாரா அல்லது அது முன்வைக்கும் கருத்தியலை கண்டு கொள்ள மாட்டாரா போன்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஒற்றை பனைமரம் என்ற படத்திற்கு சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அந்த படம் ஈழ போராளிகள், ஈழ மக்களின் கடவுள்களை இழிவுபடுத்தும் விதமாக உள்ளது எனக் கூறியுள்ளார். ஆனால் அமரனை ஆதரித்துள்ளார்.
இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும் தன்னை ஆதரிப்பதில்லை என அடிக்கடி வருத்தப்படும் சீமான், தற்போது, அவர்கள் ஒருபோதும் தன்னை ஆதரிக்கவே மாட்டார்கள் என்ற நிலைப்பாட்டிற்கு வந்து விட்டதை போல், இந்த நிகழ்வு அமைந்துள்ளது.
===========