உலகம்

ஈரானுக்கு ஆதரவாக களமிறங்கும் வல்லரசுகள் – பீதியில் உலக நாடுகள்!

ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்திருக்கின்றன. அனுசக்தி மையங்கள் மீது நடைபெற்ற தாக்குதல் பொறுப்பற்ற செயல் என ரஷ்யா கண்டனம் தெரிவித்திருக்கிறது. ஒரு நாட்டின் எல்லைக்குள் குண்டுகளையும் ஏவுகனைகளையும் வீசியது பொறுப்பற்ற செயல் என்றும் ரஷ்யா கூறியிருக்கிறது.

ஈரானின் அணு நிலைகள் மீது தாக்குதல் நடத்தியது உலக அளவில போர் பதற்றத்தை அதிகரித்திருக்கக்கூடிய ஒரு சூழலில் ஈரான் பக்கமாக சீனா மற்றும் ரஷ்யா ஆதரவு நிலைப்பாடு எடுத்திருக்கக்கூடிய ஒரு நிலையை நம்மால் பார்க்க முடிகிறது. குறிப்பாக சீனாவை பொறுத்தவரை இந்த செயல் என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது என்கிற ஒரு ரீதியிலான ஒரு எதிர்வினையை ஆற்றி இருக்கிறார்கள். அதேபோல ரஷ்யா ஈரானின் அமைச்சரை தன் நாட்டிற்கு அழைத்து பேசக்கூடிய அளவிற்கு ஒரு ஆதரவு நிலைப்பாடை எடுத்திருக்க கூடியது உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

In Tehran, locals are wary of potential war with Israel | The Times of  Israel

அதுமட்டுமில்லாமல் உலக அமைதிக்கான தூதராக இருக்கக்கூடிய மற்றும் கிறிஸ்தவ மதத்தின் தலைவராக இருக்கக்கூடிய போப் லியோ கூட இந்த போர் என்பது நிறுத்தப்பட வேண்டும். அதுமட்டுமல்லாமல் மத்திய கிழக்கு பகுதியில் நடைபெறும் அனைத்து போர்களுமே நிறுத்தப்பட வேண்டும். உலக அமைதி நிலைநாட்டப்பட வேண்டும். போர் என்பது தீர்வாகாது காயங்களை மீண்டும் ஆளப்படுத்தும் என்கிற ரீதியிலான அறிக்கையை வெளியிட்டிருப்பது ஈரானுக்கு ஆதரவானதாகவே கருதப்படுகிறது.

அது மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் வல்லரசு நாடுகளாக பலம் வாய்ந்த நாடுகளான இருக்கக்கூடிய சீனாவும் ரஷ்யாவும் தற்போது ஈரான் வசம் அதாவது அவர்களுக்கு சப்போர்ட் செய்வது, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, அமெரிக்காவிற்கு மட்டுமின்றி இஸ்ரேலுக்கும் ஈரானின் உச்ச தலைவரான அயதுல்லா அலி காமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறுக்கான தண்டனை தொடர்ந்து கொடுக்கப்படும் என்றும் எச்சரித்திருக்கிறார். ஏற்கனவே காமேனி அமெரிக்காவிற்கு இது பேரழிவாக முடியக்கூடும் என எச்சரித்திருந்த நிலையில், தற்போது இஸ்ரேலையும் பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

ஏற்கனவே இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்திருந்த ரஷ்யா, அமெரிக்கா எக்காரணம் கொண்டும் இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் தாக்குதல் நடத்தக்கூடாது என எச்சரித்திருந்தது. ஆனால் அதை எதையும் காதில் வாங்காத டிரம்ப், தற்போது ஈரானின் ஒன்றல்ல, இரண்டல்ல 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தி உலக நாடுகளுக்கு பேரழிவை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்.

ஒருவேளை ஈரானுக்கு ஆதரவாக ரஷ்யாவும், சீனாவும் களமிறங்கினால் இந்த போர் 3ம் உலகப்போராக கூட மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button