உலகம்

இஸ்ரேல் படைகளுக்கு கடும் பதிலடி! நீண்ட நாட்களுக்கு பிறகு நடவடிக்கை!

இஸ்ரேல் படைகளை குறிவைத்து மாபெரும் தாக்குதல்! - ஆக்கிரமிப்பு தரப்பில் உயிர்ச்சேதம்… காயங்கள் - ஒன்னரை ஆண்டுகள் கடந்தும் ஒடிந்து போகாத ஹமாஸ்

ரஃபாவில் ஹமாசின் ராணுவ பிரிவான அல்-கஸ்ஸாம் படைப்பிரிவு பலமுனை தாக்குதலை நடத்தி இஸ்ரேல் ஆக்கிரமிப்புப்படைகளுக்கு பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. சனிக்கிழமை, காசா மீதான “இஸ்ரேலின்” இனப்படுகொலைகளுக்க நடுவில் ரஃபாவில் IOF படைகளை குறிவைத்து பதுங்கியிருந்து நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி விரிவான அறிக்கையை அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் வெளியிட்டன.

அல்-கஸ்ஸாம் படைப்பிரிவினர் ஒரு இஸ்ரேலிய பொறியியல் பிரிவை வெடிபொருட்களால் முன்கூட்டியே பொருத்தப்பட்ட ஒரு சுரங்கப்பாதை நுழைவாயிலை நோக்கி வெற்றிகரமாக வரவழைத்ததாக தெரிவித்துள்ளது. அப்போது அல் கஸ்ஸாம் பிரிவினர் நேரடியாக தாக்கி பல இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படையினரை கொன்றதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சில இஸ்ரேலிய வீரர்கள் சுரங்கப்பாதையை நெருங்கிச் சென்றபோது, வெடிபொருட்களை வெடிக்கச்செய்ததில் பல உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. மற்றொரு தாக்குதலில் அல்-யாசின் 105 ராக்கெட் இரண்டு இஸ்ரேலிய டாங்கிகளை தாக்கப்பட்டுள்ளன.

அல்-கஸ்ஸாம் படைப்பிரிவுகள் சனிக்கிழமை, தெற்கு காசா பகுதியில் ரஃபா நகரத்திற்கு கிழக்கே அல்-ஜஹ்ரா மசூதிக்கு அருகே இஸ்ரேலிய காலாட்படை பிரிவை குறிவைத்து வெடிக்கும் கருவியை கொண்டு நடத்தப்பட்ட தாக்குதலில் சிலர் உயிரிழந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே காசா பகுதியில் நடந்த மோதல்களில் ஒரு அதிகாரி உட்பட இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.

மகாசா பகுதியின் தெற்குப் பகுதியில் நடந்த மோதல்களின் போது உயரடுக்கு யஹலோம் போர் பொறியியல் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி கொல்லப்பட்டதாகவும், அதே பிரிவைச் சேர்ந்த மற்றொரு சிப்பாயும் அதே பகுதியில் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

அதே மோதலில், யஹலோம் பிரிவைச் சேர்ந்த மற்றொரு சிப்பாய் படுகாயமடைந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. தனித்தனியாக, வடக்கு காசாவில் சனிக்கிழமை நடந்த மோதல்களில் ஜெருசலேம் படைப்பிரிவின் 7007வது பட்டாலியனைச் சேர்ந்த ஒரு ரிசர்வ் சிப்பாய் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படை தெரிவித்தள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் படை சந்தித்த மிகப்பெரிய இழப்பு இது என இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button