சினிமா

“விஜய் சேதுபதியின் மகாராஜா மீது கதை திருட்டு புகார்! பழனியைச் சேர்ந்த தயாரிப்பாளர் பரபரப்பு புகார்!

திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் நாகன் என்கிற மருதமுத்து கூறியுள்ளதாவது, பழனி அருகே உள்ள மானூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் ஒரு கதையை எழுதி தன்னிடம் கூறியதாகவும் கதை நன்றாக இருந்ததால் 10 லட்சம் ரூபாய் கொடுத்து இந்த கதையை விலைக்கு வாங்கியதாக மருதமுத்து கூறியுள்ளார்.

அத்தியாயம் ஒன்று என பெயரிடப்பட்ட அந்த கதையை 2023ம் ஆண்டு தயாரிப்பாளர் சங்கத்தில் முறையாக பதிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.மேலும் இக்கதையை குறும்படமாக எடுத்து அதை எடிட்டிங் செய்வதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் கொடுத்ததாகவும் , தொடர்ந்து, அத்தியாயம் 1 திரைக்கதையை திரைப்படமாக்க முடிவுசெ ய்து கடந்த ஆண்டு பிரபல திரைப்பட இயக்குனர் கே‌எஸ்.

ரவிக்குமார், நடிகர் சார்லி மற்றும் நடிகை ரக்ஷனா ஆகியோரிடம் கதையை கூறி, 5.5கோடி ரூபாய் பட்ஜெட் செலவில் பழனி பகுதியில் படப்பிடிப்பு நடத்த நடவடிக்கை மேற்கொண்டதாகவும் கூறியுள்ளார்.படப்பிடிப்பு துவங்கிய நேரத்தில் பழனி பகுதியில் கனமழை பெய்ததால், படப்பிடிப்பை நடத்த முடியாமல் நிறுத்தி வைத்திருந்ததாகவும், இதற்கிடையே, விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா என்ற திரைப்படம் வெளியானதாக தெரிவித்துள்ளார்.

அந்த படத்தை பார்த்தபோது, தான் முறையாக பதிவு செய்திருந்த அத்தியாயம் ஒன்று திரைக்கதையை அப்படியே படமாக்கி உள்ளது கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button