வைரல்

தண்டவாளத்தில் நின்று போட்டோ சூட்! திடீரென வந்த ரயில்! மனதை நொறுக்கும் காட்சிகள்!

ரயில் பாலத்தில் நின்று போட்டோ சூட் எடுக்க முயன்ற புது மண தம்பதிகள்…
திடீரென ரயில் வந்ததால், உயிர் பிழைக்க கீழே குதித்தனர்…
போட்டோ சூட் ஆர்வக்கோளாறுகளுக்கு சிறந்த பாடம்…

ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற இந்தச் சம்பவம் நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பக்தி நகர் பகுதியைச் சேர்ந்த ராகுல் மேவாதா என்ற 22 வயது இளைஞர், ஜான்வி என்ற தனது 20 வயது புது மனைவியுடன் சேர்ந்து, போட்டோ சூட் எடுக்க முடிவு செய்துள்ளார். இதனையடுத்து, பாலியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ரயில் பாலத்திற்கு சென்று, அங்கு போட்டோ சூட் செய்ய விரும்பியுள்ளார்.

தம்பதிகள் இரு சக்கர வாகனத்தில் சென்று, அந்த குறிப்பிட்ட ரயில் பாலத்தை அடைந்து, போட்டோ எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அந்த மீட்டர் கேஜ் ரயில் பாதையில் ரயில் வந்துள்ளது. ரயிலின் வேகத்தை பார்த்து பதறிய புதுமண தம்பதிகள், அடுத்த முனை வரை ஓட முடியாது என நினைத்து, 90 அடி பள்ளத்தில் குதித்துள்ளனர்.

அவர்களின் கெடு நேரம், ரயில் சரியாக அவர்களுக்கு முன்பே நின்று விட்டது. அதற்கு முன்பே அவசரப்பட்டு குதித்துள்ளனர். சிறிது தூரம் ஓடி தப்புவதற்கு அவர்கள் முயற்சிக்கவில்லை. அப்போது, ஆற்றில் தண்ணீர் இல்லாததால், இருவரும் படுகாயம் அடைந்துள்ளனர். மாப்பிள்ளை ராகுல் மேவாதாவிற்கு, முதுகெலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

மணப்பெண் ஜான்விக்கு காலில் எழும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இருவரும் உயிர் பிழைத்து விடுவார்கள் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
திருமணம் முடிவு செய்யப்பட்டு விட்டாலே, இன்றைய இளைஞர்கள் முதலில் யோசிப்பது, போட்டோ சூட் பற்றித் தான்.

அதற்காக பல லட்சங்களை கூட செலவு செய்கின்றனர். அந்த போட்டோ சூட், முன்பு யாரும் எடுக்காதது போன்று இருக்க வேண்டும் என்றும் விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். இது கடைசியில் ஆபத்தில் போய் முடிகின்றது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button