சிங்கமுத்துவிடம் ரூ. 5 கோடி இழப்பீடு கேட்டு வடிவேலு வழக்கு! உயர்நீதிமன்றம் விசாரணை!

நடிகர் வடிவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், யூ டியூப் சேனல்களில் தன்னைப் பற்றி நடிகர் சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.
இதனால் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் தனக்கு சிங்கமுத்து, 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். வடிவேலு தாக்கல் செய்த மற்றொரு மனுவில், இனிமேல், தன்னைப் பற்றி சிங்கமுத்து, எதுவும் பேசக்கூடாது என தடைவிதிக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார்
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து சம்பந்தப்பட்ட தரப்புக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.வடிவேலு, சிங்கமுத்து இடையே தாம்பரத்தில் நிலம் ஒன்றை வாங்கியது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு, அந்த வழக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது.
இதனிடையே சிங்கமுத்து, வடிவேலு குறித்து பல தகவல்களை தொடர்ந்து யூ டியூப் சேனல்களில் பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.