உலகம்

47 வயதில் தாத்தாவான ஷகித் அப்ரிதி!

17 வயதில் சென்சுரி அடித்து கிரிக்கெட்டில் சாதனை படைத்த அப்ரிதி…
47 வயதில் தாத்தா ஆகி குடும்ப வாழ்விலும் சாதனை…

பாகிஸ்தானின் முன்னாள் அதிரடி ஆவேச பேட்ஸ்மேன் ஷகித் அப்ரிதி, அணியில் இல்லாவிட்டாலும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திலும், ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த செல்வாக்கு கொண்ட நபராக உள்ளார்.
இவருக்கு 5 பெண் குழந்தைகள். அதில் மூத்தவர் அன்ஷா அப்ரிடி.

இவர் பாகிஸ்தான் கிரிகெட் வீரரும் தனது உறவினருமான ஷகின் அப்ரிடியை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது, ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு அலியார் அப்ரிடி என பெயர் வைத்துள்ளனர்.
இதன் மூலம் 47 வயதிலேயே தாத்தா ஆகியுள்ளார் ஷகித் அப்ரிதி.

அவர் தனது பேரக்குழந்தையை கையில் ஏந்தி, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 351 சிக்ஸ்களை அடித்து, அதிக சிக்ஸ்களை அடித்த உலகின் முதல் வீரர், 17 வயதிற்குள் 100 ரன்கள் அடித்த முதல் வீரர் உள்ளிட்ட பல சாதனைகளுக்காக தற்போதும் நினைவு கூறப்படுகிறார் சகித் அப்ரிதி.

அண்மையில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நிர்வாகம் குறித்து கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தார் அப்ரிதி.


====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button