மீண்டும் செட் அப் – போலி புகைப்படங்கள் வெளியீடு!

தெற்கு லெபனான் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தை இஸ்ரேல் கைப்பற்றி அதன் குடியிருப்பு அருகில் இருப்பது போல சில புகைப்படங்களை இஸ்ரேல் வெளியிட்டு இருக்கிறது.ஆனால் இந்தப் புகைப்படங்களில் இருக்கும் குடியிருப்பு இஸ்ரேல் எல்லையில் இருந்து வெறும் பத்து மீட்டர் தொலைவில் மட்டுமே இருக்கும் ஒரு குடியிருப்பாகும்.இஸ்ரேலை ஒட்டி உள்ள லெபனான் எல்லை முழுவதும் இது போன்ற குடியிருப்புகளை தாங்கள் உருவாக்கி வைத்திருப்பதாகவும் இது ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் மீதுள்ள எதிர்ப்பு உணர்வை வெளிப்படுத்தும் அடையாளமாய் கட்டப்பட்ட குடியிருப்புகள் என்றும் ஹிஸ்புல்லா கூறி இருக்கிறது.
இந்த 10 மீட்டர் குடியிருப்பை கூட வான்வழி தாக்குதலால் மட்டுமே அவர்களால் நெருங்க முடிந்தது எனவும் தரை வழியில் அவர்களால் முன்னேறவே முடியவில்லை என்று ஹிஸ்புல்லா கூறி இருக்கிறதுலெபனானுக்குள் இஸ்ரேலின் தரைப்படை நுழைய முயற்சித்து மிகப் பெரிய தோல்வியை சந்தித்து வருவதாகவும். இந்த உண்மையை மறைப்பதற்காக பெஞ்சமின் நெதன்யாகு, இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் பலவீனத்தை மறைப்பதாக ஹிஸ்புல்லா கூறி இருக்கிறது.இஸ்ரேலில் இருந்து லெபனானுக்குள் இரண்டு வழியாக, இஸ்ரேல் படை நுழைய முயற்சித்தும், ஹிஸ்புல்லாவிடம் தோல்வியையே சந்தித்திருக்கிறது.
இஸ்ரேல் ராணுவம் உள்ளே நுழைவதை தடுக்கும் வகையில் பல்வேறு பதுங்கு குழிகளில் ஹிஸ்புல்லா வீரர்கள் தயாராக இருப்பதாகவும், சிறிய மற்றும் பெரிய வகை ஆயுதங்களுடன் ராக்கெட் மூலம் செலுத்தப்படும் கையேறி குண்டுகளுடன் வீரர்கள் எந்நேரமும் தயாராக இருப்பதாக ஹிஸ்புல்லா கூறி இருக்கிறது.ஒவ்வொரு முறை இஸ்ரேல் லெபனானுக்குள் நுழைய முயற்சிக்கும் போது தோல்வியையே சந்தித்து இருந்தாலும், ஹிஸ்புல்லாவின் ராணுவ வீரர்கள் இஸ்ரேலின் ஒவ்வொரு நகர்வையும் கண்காணித்து வருவதாக கூறி இருக்கிறது மேலும் லெபனானின் எல்லையோரம் இருக்கும் இஸ்ரேல் ராணுவ முகாம்கள் மீதும் ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.