உலகம்

ஹவுத்திகளுக்கு நவீன ஆயுதம் வழங்க உள்ள ரஷ்யா – சவுதி அரேபியா கடும் எதிர்ப்பு

ஏமன் ஹவுத்திப் படைகளுக்கு அதி நவீன ஏவுகணைகளை வழங்க உள்ள ரஷ்யா…
சவுதி, இஸ்ரேல் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதாக அமெரிக்க பத்திரிக்கை செய்தி…

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஏமன் ஹவுத்திப் படைகள் நடத்திய தாக்குதல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யா அதி நவீன ஏவுகணைகளை ஏமன் ஹவுத்திப் படைகளுக்கு வழங்க இருப்பதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆயுதங்கள் ஈரானின் ரகசிய பாதை வழியாக ஏமனுக்கு கொண்டு செல்லப்படும் என அந்த பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த முயற்சிக்கு சவுதி அரேபியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் அந்த பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்க வழங்கும் ஆயுதங்கள் மூலம் ரஷ்ய நகரங்கள் தாக்கப்படுவதற்கு பதிலடியாக ஹவுத்திக்களுக்கு ரஷ்யா ஆயுதம் வழங்க உள்ளதாக அந்த பத்திரிக்கை கூறியுள்ளது. காசா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு பதிலடியாக, செங்கடல் வழியாக இஸ்ரேலுக்குச் செல்லும் கப்பல்களை ஏமன் படைகள் தாக்கி வருகின்றன.

இதுவரை 88 கப்பல்கள் குறிவைக்கப்பட்டுள்ளன. இதனால் இஸ்ரேலின் ஈலட் துறைமுகம் கப்பல் வருகையின்றி, மூடப்பட்டுள்ளது. செங்கடலில் உள்ள சூயஸ் கால்வாய் வருமானம் 18 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 5 ஆயிரம் கப்பல்கள் அந்த வழியாக செல்வதை நிறுத்தியுள்ளன.

ஏமன் படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் படைகள் நடத்திய தாக்குதல்கள் பயன் தரவில்லை. அமெரிக்க தனது போர்க்கப்பலை மீண்டும் அவர்கள் நாட்டிற்கு கொண்டு சென்றது. அதே நேரம் ஏமன் படைகள் தொடர்ந்து இஸ்ரேல் இலக்குகளை தாக்கி வருகின்றனர்.

இந்நிலையில் ஏமன் படைகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சவுதி அரேபியா மூலம் அமெரிக்கா காய்களை நகர்த்தத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஏமன் பொது வங்கிகள், தனியார் வங்கிகள் உடனான தொடர்புகளை சவுதி அரேபியா துண்டித்து, நிதி நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. மேலும் ஏமனின் சனா விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களுக்கு சவுதி அனுமதி மறுத்துள்ளது.

ஏமனுக்கு எதிராக சுமார் 10 ஆண்டுகள் போர் நடத்திய சவுதி, அதில் தோல்வி ஏற்பட்டு, பேச்சு வார்த்தைகளை தொடங்கியது. தற்போது, இஸ்ரேலுக்கு எதிரான ஏமன் படைகளின் தாக்குதல் தீவிரம் அடைந்து வருவதை சவுதி அரேபியா விரும்பவில்லை.

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன ஏமன் படைகள் இணக்கமாக செல்ல வேண்டும் என சவுதி அரேபியா விரும்புகிறது.
அதே நேரம் அண்மைக் காலமாக சவுதியை விட பல மடங்கு ராணுவ வலிமையை ஏமன் படைகள் பெருக்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button