சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது! பிசிசிஐ அறிவிப்பு!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை சனிக்கிழமை பிசிசிஐ வழங்குகிறது. சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது என்ற பெயரில் பிசிசிஐ ஆண்டு தோறும் கிரிக்கெட்டில் சாதித்தவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கிறது.கடந்த ஆண்டு கிரிக்கெட் ஜாம்பவான்களான ரவி சாஸ்திரி, விக்கெட் கீப்பர் பாருக் எஞ்சினியர் ஆகியோருக்கு பிசிசிஐ வழங்கியது.இந் விருதை பெறுபவர்களுக்கு பரிசுக் கோப்பை, பாராட்டு பத்திரம் மற்றும் 25 லட்சம் ரூபாய் ரொக்கம் வழக்கப்படும்.
சச்சின் டெண்டுல்கர் பிசிசிஐ அணிக்காக 664 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 200 டெஸ்ட் போட்டிகள், 463 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார்.ஒரு நாள் போட்டிகளில் 18,426 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும் குவித்துள்ளார்.அவரது சாதனை வாழ்க்கையில் ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.