வெறுப்பை தூண்டுவதால் தான் இந்த நிலை – அமெரிக்காவுக்கு ரஷ்யா அறிவுரை!

வெறுப்பை தூண்டும் அமெரிக்காவின் கொள்கைகளால் தான் இது போன்ற தாக்குதல்கள் நடக்கிறது…
டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டை சுட்டிக்காட்டி ரஷ்யா விமர்சனம்…
வெளிநாட்டு போர்களுக்கு நிதி கொடுப்பதை அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்றும் அறிவுரை…
டிரம்ப் மீதான துப்பாக்கிச்சூட்டை சுட்டிக்காட்டி, அமெரிக்காவை, ரஷ்யா மறைமுகமாக சாடியுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்த, ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மரியா சக்ரோவா, (Maria Zakharova)வெறுப்பை விதைக்கும் அமெரிக்காவின் கொள்கைகள் இனியாவது, மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும் என்றார்.
உக்ரைனுக்கு நிதி கொடுத்து, ரஷ்ய அதிபரை கொல்வதற்கு அமெரிக்கா முயற்சிக்கிறது. இனியாவது, தங்களது சொந்த நாட்டின் பாதுகாப்பு தேவையான நிதியை முதலில் ஒதுக்குங்கள்.
அமெரிக்க காவல்துறை மற்றும் உள்ளூர் பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவையான நிதியை வழங்கி, உங்கள் நாட்டின் சட்டம் ஒழுங்கை முதலில் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருங்கள். என அறிவுரை வழங்கியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான போட்டியில் முன்னணியில் உள்ளார் டொனால்டு டிரம்ப். இந்த நிலையில், அவர் பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, திடீரென சீறிப்பாய்ந்து வந்த தோட்டா ஒன்று, அவரது காதின் மேற்புறத்தை கிழித்துக் கொண்டு சென்றது.
இதனால் பெரும் அமளி துமளி ஏற்பட்ட நிலையில், பாதுகாவலர்கள் உடனடியாக பதிலடி கொடுத்தனர்.இதில் கொலை கும்பலைச் சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயத்துடன் மீட்கப்பட்ட டொனால்டு டிரம்ப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
===