ரூ. 225 கோடி நட்டம்! தலைமறைவான இயக்குநர்! பிரபாஸ் நடித்தும் விற்காத சரக்கு!

பிரபாஸ் நடித்தும் கடும் நட்டம்…ரூ.225 கோடியை இழந்த தயாரிப்பாளர்…தலைமறைவான இயக்குநர்…பாகுபலி மூலம் இந்திய சினிமாவின் உச்சத்துக்கு சென்ற பிரபாஸ், சில நேரங்களில் சறுக்கிய சம்பவங்களும் உண்டு. குறிப்பாக அவர் நடித்த ஆதி புருஷ் திரைப்படம் 225 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்த செய்திகள் பரபரப்பு ஆகி வருகின்றன.
இந்த திரைப்படம் 550 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. ராமாயணக் கதையை கருவாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த படம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த நிலையில் படம் உலக அளவில் 325 கோடி ரூபாய் மட்டுமே வசூலை ஈட்டியது. இதனால் 225 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டது. சர்ச்சை காரணமாக இயக்குநர் மற்றும் எழுத்தாளர் தலைமறைவு ஆகினர்.
இதுமட்டுமின்றி, மேலும் பல பெரிய பட்ஜெட் படங்கள், மாபெரும் நட்டத்தை சந்தித்துள்ளன.
பிரபாஸ் – பூஜா ஹெக்டே நடித்த ராதே ஷியாம் 170 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்தது.முகமது கோரியை வில்லனாக சித்தரித்து தயாரிக்கப்பட்ட, சாம்ராட் பிருத்விராஜ் திரைப்படம் 140 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்தது.
ரன்பீர் சிங் நடித்த ஷம்ஷேரா 100 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்தது.
சிரஞ்சீவி மற்றும் அவரது மகன் ராம்சரன் நடித்த ஆச்சார்யா திரைப்படம் 80 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்தது.
கன்னட நடிகர் உபேந்திரா நடித்த கப்ஸா திரைப்படம் 80 கோடி ரூபாய் நட்டத்தைச் சந்தித்தது.
மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்ட அமிர்கானின் லால் சிங் சத்தா 70 கோடி ரூபாயும், அமித்தா பச்சனின் தக் ஆஃப் இந்துஸ்தான் 60 கோடி ரூபாயும் நட்டத்தைச் சந்தித்தன.
சினிமா புகழ் நடிகர்களுக்கு ஒரு போதையை கொடுப்பது போல், மிதமிஞ்சிய லாபம் தயாரிப்பாளர்களுக்கும் போதையை கொடுக்கிறது.குறைந்த பட்ஜெட் படங்கள் சில நேரங்களில் பல மடங்கு லாபத்தை குவிப்பதன் மூலம், தயாரிப்பாளர்கள், விளக்கை தேடி வரும் விட்டில் பூச்சிகளை போல் ஈர்க்கப்படுகின்றனர்.இத்தனை கோடி லாபம், அத்தனை கோடி லாபம் என பூதாகரப்படுத்தும் ஊடகங்கள், நட்டங்கள் பற்றி அவ்வளவாக பேசுவதில்லை