ரூ. 2 லட்சம் கொடுத்தால் ஐ.பி.எஸ்! பீகாரில் விநோதம்!

பீகார் மாநிலத்தில் தான் இந்த வினோதச் சம்பவம் நடைபெற்றது. மித்லேஸ் குமார் என்ற சிறுவனுக்கு ஐ.பி.எஸ். அதிகாரி ஆக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதனை மனோஜ் சிங் என்ற மோசடி பேர்வழியிடம் கூறியுள்ளான். இதனை பயன்படுத்திக் கொண்ட மனோஜ் சிங், சிறுவனிடம் 2 லட்சம் ரூபாய் கொண்டு வந்தால், உன்னை ஐ.பி.எஸ். ஆக்குகிறேன் என்று கூறியுள்ளான். இதனை நம்பிய சிறுவன், பணத்தை எப்படியோ புரட்டி, மனோஜ் சிங்கிடம் கொடுத்துள்ளான்.இதனையடுத்து, அந்த சிறுவனுக்கு, ஐ.பி.எஸ். சீருடை, மற்றும் கைத் துப்பாக்கி ஒன்றை கொடுத்துள்ளான். அந்த சிறுவனும் அதனை அணிந்து கொண்டு, தனக்கு உண்மையிலேயே ஐ.பி.எஸ். வேலை கிடைத்துவிட்டதாக நினைத்து, ஜமுய் பகுதியில் உள்ள சிக்கந்தரா பாத் காவல்நிலையத்திற்கு சென்று, தான் புதிய ஐ.பி.எஸ். அதிகாரி எனக் கூறியுள்ளான்.
இதனைப் பார்த்த காவல்நிலைய அதிகாரிகள், உண்மையை தெரிந்து கொண்டு, அந்த சிறுவன் ஏமாந்து விடக் கூடாது என்பதற்காக, சிறிது நேரம் அவனுக்கு உரிய மரியாதை கொடுத்து, உண்மையான ஐ.பி.எஸ். அதிகாரி போலவே நடத்தியுள்ளனர். அந்த சிறிது நேரத்தில், அந்த சிறுவனும், தன்னை அனைவரும் ஐ.பி.எஸ். அதிகாரி என ஏற்றுக் கொண்டதாக நினைத்து மகிழ்ந்துள்ளான்.பிறகு, அவனிடம் உரிய விசாரணை நடத்திய போது, தன்னிடம் மனோஜ் சிங் என்பவர் 2 லட்சம் கொடுத்து, சீருடையும், கைத்துப்பாக்கியும் கொடுத்ததாக தெரிவித்துள்ளான்.இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.