ரூ. 25 லட்சம் இலவச சிகிச்சை – சர்ச்சையில் சிக்கிய சயிப் அலி கான்!

பாலிவுட் நடிகர் சயிப் அலிகான் கொடூரமாக தாக்கப்பட்டு, மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவருக்கு சில நாட்களில் மட்டும் சுமார் 36 லட்சம் ரூபாய்க்கு சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான கட்டணத்தை வழங்குமாறு, அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை விடுத்த நிலையில், சில மணி நேரங்களில் சுமார் 25 லட்சம் ரூபாய் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை தேவை என்றும், ஆனால், அதனைக் கூட பெறாமல், துரிதமாக செயல்பட்டு, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அவருக்கு கிளைம் வழங்கி இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.சாதாரண பொதுமக்களுக்கு இவ்வளவு துரிதமாக கிளைம்களை வழங்காத நிறுவனங்கள், பிரபலங்களுக்கு மட்டும் வழங்குகின்றார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என AMC எனப்படும் The Association of Medical Consultants அமைப்பு வலியுறுத்தியுள்ளது.அண்மையில் நடிகர் சயிப் அலி கான் குடும்பத்தினர், சுமார் 15,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை எதிரி சொத்துக்கள் சட்டத்தின் அடிப்படையில் அரசு கையகப்படுத்த உள்ள செய்தி வெளியானது. தற்போது, இந்தச் செய்தி வைரலாகி வருகிறது.மிகப்பெரும் கோடீஸ்வரரான சயிப் அலிகான், இலவசமாக சிகிச்சை பெற வேண்டிய அவசியம் இல்லை என்றும், தனியார் காப்பீட்டு நிறுவனங்களில், பாலிசி வைத்திருந்ததால், கிளைம் செய்து பணத்தை பெற்றதாகவும், மக்கள் நலனுக்காக அவர், கோடிக்கணக்கான ரூபாய் செலவிட்டு வருவதாகவும் அவரது ரசிகர்கள் ஆதாரங்களை அள்ளிவிட்டு வருகின்றனர்.