
இந்தியாவில் 100 ரூபாய்க்கு விற்கப்படும் பாராகான் செருப்பு சவுதியில் 1 லட்சம்…
சமூக வலைதளங்களில் தீயாக பரவும் செய்தி…
இந்தியாவின் பிரபல செருப்பு கம்பெனி பாராகான். இதன் மலிவு விலை செருப்பு தான் இன்றளவும் கிராம மக்களின் முக்கிய காலணியாக உள்ளது. அதிலும் குறிப்பாக 60 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் ரப்பர் செருப்பு சாதாரண ஏழை, எளிய மக்களின் காலணியாக இன்றளவும் உள்ளது. இந்த செருப்புகளை பெரும்பாலும் கழிவறை செருப்புகளாக பயன்படுத்துவதும் உண்டு.
இந்த நிலையில் தான் குவைத் இன்சைட் என்ற ஒரு இண்ஸ்டகிராம் பக்கத்தில், இந்தியாவின் தனித்துவம் மிக்க செருப்புகள் என விளம்பரம் கொடுக்கப்பட்டு, பாராகான் ரப்பர் செருப்பு 4500 ரியால்களுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து செய்திகள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இதுகுறித்து கருத்து தெரிவித்து வரும் நெட்டிசனிகள், இத்தனை நாட்களாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செருப்பையா நான் கழிவறைக்கு பயன்படுத்தி வந்தேன் என பதிவிட்டு, கலாய்த்து வருகின்றனர்.
சில வட இந்திய நெட்டிசன்களோ, தவறு செய்யும் குழந்தைகளை இந்த செருப்பை வைத்து தான் தாய்மார்கள் அடித்து, மிரட்டுவார்கள், அதன் விலை ஒரு லட்சம் என்று அவர்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என பதிவிட்டுள்ளனர்.
அமெரிக்காவில் பழைய சோறு, வேப்பங்குச்சி உள்ளிட்ட நாம் சாதாரணமாக நினைக்கும் பல உணவுப்பொருட்கள், விசயங்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவது போல், தற்போது, நாம் அலட்சியமாக நினைக்கும் பாராகான் செருப்பை ஒரு நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கு, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களுக்கு விற்பனை செய்வது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
====