உலகம்

காசாவில் இருந்து டெல் அவிவ் நோக்கி ராக்கெட் வீச்சு – தொடர் தோல்வியில் இஸ்ரேல்!

முற்றுகையிடப்பட்ட துண்டு நிலப்பரப்பில் உள்ள ஒரு குழுவை ஒடுக்க முடியாமல், மத்திய கிழக்கின் வல்லரசு என கூறப்படும் இஸ்ரேல் 325வது நாளாக திணறி வருகிறது.ஹமாஸை தோற்கடிக்கப்போகிறோம், பணய கைதிகளை மீட்கப்போகிறோம் போன்ற 2 முக்கிய போர் இலக்குகளை முன்வைத்து, 10 மாதங்களுக்கு முன்பு தாக்குதலை தொடங்கிய இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள், அப்பாவி காசா மக்களை கொன்று குவித்ததை தவிர்த்து, எந்தவித போர் இலக்குகளையும் இதுவரை அடையவில்லை.தற்போது, அதே ஹமாசுடன் பணய கைதிகளை விடுவிக்க பேச்சு நடத்தி வருகிறது இஸ்ரேல்.

இந்த நிலையில், காசா போராளிக்குழுவான ஹமாஸ் டெல் அவிவின் தெற்கு நகரமான Rishon Lezion ஐ நோக்கி M90 ரக நெடுந்தொலைவு rocket களை வீசியுள்ளது. இந்த ராக்கெட் திறந்த வெளிப்பகுதியில் விழுந்ததாகவும், அபாய எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த தாக்குதலில் காயமோ, உயிரிழப்போ ஏற்படவில்லை என ஆக்கிரமிப்பு நிர்வாகம் தெரிவித்துள்ளது.மத்திய காசாவின் தெய்ர் அல் பலாவில் செயல்பட்டு வந்த ஒரே ஒரு மருத்துவமனையான அல் அக்சா மருத்துவமனையை மூட இஸ்ரேல் உத்தரவிட்டதற்கும், மக்களை தொடர்ந்து இடம்பெயரச் செய்வதற்கு பதிலடியாகவும் இந்த தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் குறிப்பிட்டுள்ளது.

காசா மீது 325வது நாளாக போர் தொடுத்து வரும் இஸ்ரேல் இதுவரை 40 ஆயிரத்து 334 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 93ஆயிரத்து 356 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் இடிபாடுகளிலேயே உள்ளது.உலக நாடுகள் கடந்த 10 மாதங்களாக இந்த கொடூரங்களை வேடிக்கை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button