இந்தியாவிலேயே பணக்கார ஐஏஎஸ் ஆபீசர்… வாங்குற சம்பளம் வெறும் ஒரு ரூபாய்!

இந்திய நிர்வாக சேவையில் (IAS) ஒரு அதிகாரியின் அடிப்படை சம்பளம் 56 ஆயிரத்து 100 ரூபாயிலிருந்து தொடங்குகிறது கேபினட் செயலாளருக்கான சம்பளம் 2 லட்சத்து 50 ஆயிரம் வரை இருக்கக்கூடும். இருப்பினும், இந்தியாவின் பணக்கார ஐஏஎஸ் அதிகாரி ஒருவர், தனது சம்பளமாக ஒரு ரூபாயை மட்டுமே பெறுகிறார். அவரது பெயர் அமித் கட்டாரியா. ஹரியானா குருகிராமில் வசித்து வருகிறார்.
இவரது குடும்பம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் பிரபலமான ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களை நடத்தி வருகிறது. மற்றொருபுறம், அமித்தின் மனைவி ஒரு விமானி. இவரும் நன்றாக சம்பாதிக்கிறார். இவருடைய ஒட்டுமொத்த சொத்து மதிப்பு கிட்டத்தட்ட 9 கோடியைத் தொடுகிறது.
நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற அமித், தனக்கு சம்பளமாக ஒரு ரூபாய் போதும் என கூறிவிட்டார். ஏனெனில் பணத்திற்காக இந்த வேலைக்கு வரவில்லை, நாட்டிற்கு நல்ல குடிமகனான என்னால் ஆன சேவையாற்றவேன் ஐஏஎஸ் ஆனேன் என்கிறார்.
வெறும் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் வெளிப்படைத்தன்மையைக் கடைபிடிக்கும் அமித், நேர்மையான ஐஏஎஸ் ஆபீசராக பெயர் பெற்றவர். இந்த சம்பள விவகாரத்தில் மட்டுமல்ல, சன் கிளாஸ் அணிந்து கொண்டு பிரதமர் மோடியைச் சந்தித்ததற்காக சர்ச்சையில் சிக்கியதன் மூலமாக படு பிரபலமானவர்.
2015ம் ஆண்டு பிரதமருடனான சந்திப்பின் போது அமித் கூலிங்கிளாஸ் அணிந்திருந்தது அன்றைய தலைப்புச் செய்திகளில் வெளியாகி பெரும் சர்ச்சை வெடித்தது. இதனால் நெறிமுறைகளை மீறியதாக இவருக்கு மாநில அரசிடம் இருந்து நோட்டீஸ் கூட அனுப்பப்பட்டது. தற்போது மீண்டும் தனது சம்பளம் மூலமாக ஊடகங்களின் தலைப்புச்செய்தியாக அமித் கட்டாரியா மாறியுள்ளார்.