உலகம்

காசாவின் தல் அல் ஹவாவில் 30 உடல்கள் மீட்பு!

காசாவின் தல் அல் ஹவா முற்றுகையை முடித்துக் கொண்ட ஆக்கிரமிப்பு படைகள்…

இறந்தவர்களின் உடல்கள் பல நாட்களாக கேட்பாராற்று கிடந்ததால், அழுகி சிதைந்த கொடுமை…

30 உடல்கள் எடுக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தீவிரம்…

காசாவின் தல் அல் ஹவா பகுதியை முற்றுகையிட்ட கடந்த பல நாட்களாக தொடர் தாக்குதல் நடத்தி வந்த ஆக்கிரமிப்பு படைகள் போராளிகளின் கடும் எதிர்ப்பையும் எதிர்கொண்டன. இஸ்ரேல் படைகளின் கல்லறையாக தல் அல் ஹவா அமைந்தது.

அதே நேரம் காசா பொதுமக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்ததுள்ளது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு படைகள். தற்போது, படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், அந்த இடத்திற்கு பாலஸ்தீன் சிவில் மீட்பு குழுவினர் சென்று பார்த்த போது, பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

காயம் அடைந்த பலர் உரிய சிகிச்சையின்றி, உயிருக்கு போராடி வந்தது தெரியவந்ததையடுத்து, அவர்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் கொல்லப்பட்டவர்களின் உடல்களை அடக்கம் செய்ய யாரும் இல்லாததால், அவை அழுகி சிதைந்துள்ளன.

இதே போல் பலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளனர். யாரும் உயிருடன் இருக்கிறார்களா என்பதையும் பாலஸ்தீன் குழுக்கள் தீவிரமாக தேடி வருகின்றனர். இடிபாடுகளை அகற்ற போதிய கருவிகள் பாலஸ்தீனியர்களிடம் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button