சினிமா

மீண்டும் திரைப்பயணத்தில் அடியெடுத்து வைக்கும் நடிகர் விஜய் ?

விஜய்யின் அரசியல் செயல்பாடுகள் எப்போதுமே விமர்சிக்கப்பட்டு வருவதுண்டு. அதில் தற்போது அவர் நடித்து வரும் ஜனநாயகன் தான் அவருடைய கடைசி படம் என அவர் அறிவித்துள்ளார்.

ஆனால் திரை பிரபலங்கள் முதல் தயாரிப்பாளர்கள் வரை அனைவரும் அவர் இதை ஒரு முறை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி வருகின்றனர். அதேபோல் அவர் நிச்சயம் நடிப்பார் என்ற யூகமும் இருக்கிறது.

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் விஜய். இவர் சுமார் 69 படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது இவர் திரைத்துறையில் இருந்து விலகி தீவிர அரசியலில் குதித்துள்ளார். சில ஆண்டுகளாகவே விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்கிற பேச்சுக்கள் பொதுவெளியில் இருந்த நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி இரண்டாம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்கிற கட்சியைத் தொடங்கினார். சில ஆண்டுகளாக பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை மாவட்ட வாரியாக அழைத்து அவர்களுக்கு பரிசு மற்றும் விருதுகள் கொடுக்கும் விழாவை விஜய் நடத்தி வந்தார். இது அவருடைய அரசியலுக்கு அடித்தளமாக பார்க்கப்பட்டது.

முதல் தலைமுறை வாக்காளர்களை கவர்வதற்காக அவர் இந்த விழாவை நடத்தி வருவதாக அப்போது விமர்சனம் இருந்தது. பின்னர் ஒரு கட்டத்தில் அவர் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். தமிழகத்தின் உரிமைகளை மீட்கப் போவதாக கூறி கட்சி தொடங்கிய அவர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், அம்பேத்கர், பெரியார் ஆகியோரை கொள்கைத் தலைவர்களாகவும், திராவிடமும் தேசியமும் தனது கட்சியின் இரு கண்கள் என்றும் கூறி அரசியல் பயணத்தைத் தொடங்கினார். தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை கட்சியின் நிர்வாகிகளாக மாற்றினார். தற்போது தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் மத்தியில் ஆளும் பாஜக இருவரும் தங்கள் கொள்கை எதிரிகள் என்று கூறி அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் விஜய் திரைத்துறையில் இருந்து விலகப் போகிறார் என்கிற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜய் அரசியலுக்கு வந்த்து மகிழ்ச்சியை ஏற்படுத்திய அதே நேரத்தில் அவர் திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டார் என்கிற செய்தி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. ரசிகர்கள் தொடங்கி பலரும் விஜய் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சினிமாவில் அவர் மீண்டும் நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் விஜய் இது குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். ‘ஜனநாயகன்’ படத்திற்குப் பின்னர் அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறார் என்றும், 2026 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலே அவரது இலக்கு என்றும் தவெகவினர் கூறி வருகின்றனர்.

இந்த சூழலில் நடிகை மமிதா பைஜூ ஜனநாயகன் படப்பிடிப்பில் விஜய்யிடம் அவருடைய கடைசி படம் குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். அதற்கு அவர் 2026 தேர்தலை பொறுத்து முடிவு செய்வேன் என கூறியிருக்கிறார்.

இதை அவர் ஒரு நிகழ்ச்சியில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இப்படி ஒரு கருத்து இருக்கும் நிலையில் இந்த செய்தியும் விவாதமாக மாறி இருக்கிறது.

விஜய் அரசியலை புரிந்து கொண்டாரா?
2026 தேர்தல் மீதான நம்பிக்கை அவருக்கு குறைகிறதா? என பல கேள்விகள் எழுந்து வருகிறது. இதற்கு சினிமா விமர்சகர்கள் நிச்சயம் அப்படி இருக்க வாய்ப்பு கிடையாது.

தற்போது வரை அவர் முதல்வர் நாற்காலியை பிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறார். ஒருவேளை அது நடக்காத பட்சத்தில் மீண்டும் நடிப்புக்கு வர வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அடுத்த வருட தேர்தல் தான் இதற்கான பதிலாக அமையும்.

அதனால் விஜய் நம்பிக்கை இழந்து விட்டார் பயந்துவிட்டார் என வரும் செய்திகள் எல்லாம் வெறும் வதந்தி தான் என மூத்த பத்திரிகையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button