சினிமா

முடிவுக்கு வந்த ரஜினி, சத்தியராஜ் பகை – 38 வருடங்களுக்கு பிறகு “கூலி”யில் இணைகின்றனர்!

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி விவகாரம் தொடர்பாக நடிகர் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ரஜினிகாந்தை புரட்டி எடுத்தார் நடிகர் சத்யராஜ்.தமிழ்நாட்டு மக்களுக்கு பிரச்னைகள் வரும் போது, அதற்காக குரல் கொடுக்கும் நடிகராக உள்ளார் சத்தியராஜ். அதே நேரம் ரஜினிகாந்த், ஸ்டெர்லைட் விவகாரம் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் மக்கள் பக்கம் நிற்காமல் புறக்கணித்ததாக குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இருவரும் ஒன்றாக கடைசியாக இணைந்து நடித்த படம் மிஸ்டர் பாரத். ரஜினியை விட 4 வயது குறைவானவரான சத்தியராஜ், ரஜினிக்கு அப்பாவாக நடித்திருந்தார். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றாலும் இருவரும் அதற்கு பிறகு சேர்ந்து நடிக்கவில்லை.தற்போது, ரஜினிகாந்த் தமிழின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உள்ளார். அதே நேரம் சத்தியராஜும் சோடை போகவில்லை. பல மொழிப்படங்களிலும் குணச்சித்திர நடிகராக வலம் வருகிறார்.

இந்நிலையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து, லோகேஷ் கனகராஜின் கூலி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘இதுகுறித்து பட நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதே போல் சல்மான் கானின் சிக்கந்தர் படத்தில் வில்லன் கேரக்டரில் சத்தியராஜ் நடிக்க உள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button