போலி எண்கவுண்டர்களை நியாயப்படுத்தும் படமா? ரூ.100 கோடி பட்ஜெட் படம் ராயன் எப்படி உள்ளது?

திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தனுஷ்ன் ராயன்…
போலி எண்கவுண்டர்களை நியாயப்படுத்துவதாக புகார்…
சுவாரஸ்யத்துக்கு பஞ்சம் இருப்பதாக விமர்சனம்…
பவர் பாண்டி படத்தை தொடர்ந்து, தனுஷின் 50 வது படத்தை தனுஷே இயக்கி வெளியிட்டுள்ளார். சுமார் 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், தனுஷ் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது.
இந்தத் படத்தின் கதையை பொருத்தவரை, அசுரன் சாயலுடன், உருவாக்கப்பட்டுள்ள ஒரு திரில்லர் ரிவெஞ்ச் கேங்ஸ்டர் கதை… ஆனால் ஒரு emotional depth, அதாவது ஆழமான உணர்ச்சிகளை காட்டுவதில், குறைகள் உள்ளதாக இந்தியா டுடே விமர்சனக்குழு தெரிவித்துள்ளது. பழி தீர்ப்பதற்கு உணர்ச்சிகள் முக்கியம்.
ஆனால் பழி தீர்க்கப்படுதலை நியாயப்படுத்துவதில் குறைகள் உள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. அதே போல் இரண்டாம் பாதியில் பல கேள்விகள் உள்ளன. அவை தீர்க்கப்படாமலேயே உள்ளன. இதனால் ஒரு திரில்லராக இந்த படத்தில் குறைகள் உள்ளன.
தனுஷ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தங்களது வேலையை முடிந்த அளவு செய்துள்ளனர். அதே போல் போலி எண்கவுண்டர்களை இயல்புபடுத்தும், தமிழ் திரைப்படங்களின் வரிசையில் இந்தப் படமும் ஒன்றாக இணைந்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ரவுடி கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான வழியாக, போலி எண்கவுண்டர்கள் மட்டுமே தீர்வாக முன் வைக்கப்படுவது தமிழ் சினிமாக்களின் வழக்கமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படம், முதல் நாள் உலகம் முழுவதும் 15 கோடி முதல் 18 கோடி ரூபாயை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஒன் இந்தியா ஆங்கில இணையதளம் தெரிவித்துள்ளது.
====