16 ஆண்டுகளுக்கு பிறகு செச்சன்யா குடியரசுக்கு விஜயம் செய்த புதின் – புதிய பள்ளிவாசலை பார்வையிட்டார்!

செச்சன்யா மாநிலத்திற்கு விஜயம் செய்த விளாடிமிர் புதின்…
உக்ரைன் போருக்கு தொடர்ந்து உதவுமாறு வேண்டுகோள்…
புதிய பள்ளிவாசலில் வைக்கப்பட்ட தங்க திருக்குர்ஆனை பார்வையிட்டார்…
ரஷ்யாவின் ஒரு மாநிலம் செச்சன்யா. நீண்ட காலமாக ரஷ்ய கம்யூனிஸ்டு அரசை எதிர்த்து போரிட்ட மாநிலம். தற்போது, செச்சன்யா குடியரசு என்ற பெயரில் தன்னாட்சி பிராந்தியமாக உள்ளது. இந்த மாநிலத்திற்கு 16 ஆண்டுகளுக்கு பிறகு, திடீர் விஜயம் மேற்கொண்டார் ரஷ்ய அதிபர் புதின். அவரை செச்சன்யா தலைவர் ரம்ஜான் காதிரோவ் வரவேற்றார்.
அங்கு புதிதாக கட்டப்பட்ட இறைத்தூதர் ஈஷா பள்ளிவாசலுக்கு சென்ற விளாடிமிர் புதின், அங்கு வைக்கப்பட்டிருந்த, தங்கத்தால் ஆன புனித திருகுர்ஆனை பார்வையிட்டார். ரஷ்யாவில் மட்டுமே, இஸ்லாமியர்களும், கிறிஸ்தவர்களும், தொடர்ந்து நல்லுறவோடு நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்து வருவதாக புதின் அப்போது, பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து செச்சன்யா தங்களோடு இருக்கும் வரை, ரஷ்யாவை எந்த நாட்டாலும் வெல்ல முடியாது என்றும் புதின் தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கு எதிரான போரில் செச்சன்யாவில் இருந்து, 47 ஆயிரம் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களது செச்சன்ய படைப்பிரிவு தொடர்ந்து உக்ரைனுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
===