நிரந்தரமாக லண்டனில் செட்டில் ஆக திட்டம்! கிரிக்கெட், நடிப்புக்கு முழுக்கு?

குழந்தைகளுக்காக நடிப்புக்கு முழுக்கு போட்ட அனுஷ்கா சர்மா…
நிரந்தரமாக லண்டனில் செட்டில் ஆக திட்டமிடும் கோலி…
ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய ஏமாற்றம்…
தோனிக்கு பிறகு இந்திய அணியின் ஆபத்பாண்டவனாக வந்தவர் விராட் கோலி. பெவிலியனில் இருந்து, அவரை அனுஷ்கா சர்மா உற்சாகப்படுத்த, பந்துகளை சிதறவிட்டு, கோடிக்கணக்கான ரசிகர்களை கைப்பற்றியர் விராட் கோலி.
இந்த நிலையில், கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அனுஷ்கா சர்மாவை காணவில்லை. ஆட்டம் முடிந்து, கோப்பையை கைப்பற்றிய விராட் கோலி, டி20யில் இருந்து தனது ஓய்வையும் அறிவித்தார்.
லண்டனுக்கு பறந்த அவர், தனது மனைவி, குழந்தைகளோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து வருகிறார்.
இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அனுஷ்கா சர்மா கடைசியாக 2018 ஆம் ஆண்டு வெளியான ஜீரோ படத்தில் நடித்தார். அதற்கு பிறகு, முழுக்க முழுக்க குழந்தைகளை கவனிப்பதிலேயே அவரது கவனத்தை செலுத்தி வருவதாக கூறப்படுகிறது.
தம்பதியின் முதல் பெண் குழந்தை வாமிகா. தற்போது 3 வயது ஆகிறது. இரண்டாவது ஆண் குழந்தை ஆகாய். குழந்தைகளின் பிரைவேசி மீது அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
விராட் கோலி ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வரை பிசிசிஐ மூலமாக ஊதியம் பெற்று வந்தார். ஐ.பி.எல். போட்டிகளில் பெங்களூரு அணியின் கேப்டனாக இருந்த அவர், கடைசியாக 15.25 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இண்ஸ்டகிராமில் 27 கோடி பாலோயர்களுடன் இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறார்.
தனால் இவரது இண்ஸ்டகிராமில் ஒரு போஸ்ட் போடுவதற்கு மட்டும் 14 கோடி ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார். இவரது ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் 1000 கோடி ரூபாய்.
மும்பையில் 34 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு பங்களாவும், டெல்லி குர்கானில் 80 கோடி ரூபாய்க்கு ஒரு பங்களாவும் வைத்துள்ளார். பல்வேறு தொழில் நிறுவனங்களிலும் முதலீடுகளை செய்துள்ளார்.
அனுஷ்கா சர்மாவின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் 30 கோடி ரூபாய்.
விராட் கோலியின் தாயார் சகோதரர்கள் டெல்லியில் வசிக்கின்றனர். இதனால், அவருக்கு நிரந்தரமாக லண்டனுக்கு இடம்பெயர்வது சந்தேகம் என கூறப்பட்டாலும், அனுஷ்கா சர்மா ஆண்டுக் கணக்கில் லண்டனில் இருந்து வருவதால், அங்கு நிரந்தரமாக குடியேறலாம் என நம்பப்படுகிறது.
====