தவறான கண்ணோட்டத்தில் புகைப்படம் எடுக்கின்றனர் – ஜான்வி கபூர் எதிர்ப்பு!

பின்னால் இருந்து புகைப்படம் எடுக்க கடும் எதிர்ப்பு…
தவறாக சித்தரிப்பதாக நடிகை ஜான்வி கபூர் விளக்கம்…
பாப்பரசி என்ற நிறுவனத்தினர் மது விருந்துகள், நிகழ்ச்சிகளுக்கு செல்லும் நடிகைகளை புகைப்படம் எடுப்பதை மட்டுமே தொழிலாக வைத்துள்ளனர். இதற்காக அந்த நடிகர், நடிகைகளிடம் கட்டணம் பெற்றுக் கொள்கின்றனர். மேலும் நடிகைகள் பெரும்பாலும் அரைகுறை ஆடைகளை அணிந்து வருவதை, வேறு வேறு கோணத்தில் இருந்து புகைப்படம், வீடியோக்கள் எடுத்து, சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு, அதன் மூலமாகவும் வருமானம் பெறுகின்றனர்.
இந்த நிலையில், இதுகுறித்து முக்கியமான ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார், மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர். புகைப்படக் கலைஞர்கள் நடிகைகளின் முகத்தை புகைப்படம் எடுப்பதை விட, பின்னால் திரும்பச் சொல்லி புகைப்படம் எடுக்கின்றனர் என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் இந்த படங்களை பதிவிட்டு, இந்த நடிகை யார் என்று சமூக வலைதளங்களில் கேள்விகளை பதிவிடுகின்றனர். எனது உடலில் எந்த பகுதியை அவர்கள் காட்ட வேண்டும் என்பதை நான் தான் முடிவு செய்ய வேண்டும். இந்த முறையில் அவர்கள் நடந்து கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை என கூறியுள்ளார்.
உண்மையில் இதுபோன்ற கேள்விகளுக்கு ஆபாசமான முறையில் நெட்டிசன்கள் பதில் அளிக்கின்றனர். இதனை தெரிந்து கொண்டே, ஜான்வி கபூர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக பார்க்கப்படுகிறது. தனது எதிர்ப்புக்கு பிறகு, தன்னை பின்னால் இருந்து புகைப்படம் எடுப்பதை அவர்கள் நிறுத்திக் கொண்டதாக ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார்.
பல நடிகைகளும் இதனை கண்டும் காணாமல் சென்ற நிலையில், ஜான்வி கபூர் துணிச்சலாக கேள்வி எழுப்பியுள்ளதாக அவரது ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
==