காசாவுக்குள் செல்ல அனுமதி தேவை – 60 சர்வதேச ஊடகங்கள் கோரிக்கை!

காசாவுக்குள் செல்ல அனுமதி தேவை!
இஸ்ரேலுக்கு 60 சர்வதேச ஊடகங்கள் கோரிக்கை!
காசா நகருக்குள் செல்ல தங்களுக்கு அனுமதி வழங்குமாறு முக்கிய சர்வதேச ஊடகங்கள் மற்றும் சிவில் சொசைட்டி அமைப்புகள் இஸ்ரேலுக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளன.
The Associated Press, AFP, BBC, CNN, The Guardian, The New York Times, மற்றும் The Washington Post உள்ளிட்ட ஊடகங்கள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன. அக்டோபர் 7 ஆம் தேதிக்கு பிறகு, காசா மீது இஸ்ரேல் வான் வழித் தாக்குதலை தொடங்கியது.
இதனையடுத்து ஊடகவியலாளர்கள் பலர் அங்கிருந்து வெளியேறினர். காசாவைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள் மட்டும், அங்கு பணியில் இருந்தவாறு தங்களது நிறுவனங்களுக்கு செய்திகளை அனுப்பி வந்தனர். அவர்களை குறிவைத்து இஸ்ரேல் கொல்லத் தொடங்கியது. இதுவரை சுமார் 100 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
எஞ்சிய பலரின் குடும்பங்கள் அழிக்கப்பட்டுள்ளன. காசாவில் செய்திகளை அனுப்புவதற்கான மின்சாரம், கணினி, இணையதள வசதி, தொலைப்பேசி வசதி, இ மெயில், சர்வர்கள் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை.
இதனால் அங்கு என்ன நடைபெறுகிறது என்ற செய்திகள், 90 சதவீதம் வெளி உலகிற்கு தெரியவில்லை.
மேற்குகரையில் மட்டுமே சூழல் சற்று இயல்பாக உள்ளது. அங்கிருந்தே பெரும்பாலான ஊடகங்கள் பாலஸ்தீன் பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
இந்தச் சூழலில் தான், முன்னணி ஊடக நிறுவனங்கள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
நிச்சயம் இதற்கு இஸ்ரேல் அனுமதி வழங்காது என கூறப்படுகிறது.
====