உலகம்

காசாவில் அமைதிக் படை – ஐக்கிய அரபு அமீரகம் திட்டம்! போராளிக்குழுக்கள் எதிர்ப்பு!

காசாவில் சர்வதேச நாடுகளின் அமைதிப்படையை நிறுத்த ஐக்கிய அரபு அமீரகம் திட்டம்…
பாலஸ்தீனியர்களைத் தவிர யார் வந்தாலும், ஆக்கிரமிப்பாளர்கள் தான் என ஹமாஸ் பதிலடி…

காசாவில் அரபு மற்றும் உலக நாடுகளின் ராணுவம் அடங்கிய அமைதிப் படையை நிறுத்தி, அங்கு தேவையான உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெரிவித்துள்ள அந்நாட்டு அமைச்சர், Reem al-Hashimy பாலஸ்தீன் அத்தாரிட்டி விரும்பினால், காசாவில் அமைதி மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்த, சர்வதேச அமைதிப் படையை அனுப்பி, அதன் மூலம் நிவாரணங்களை வழங்கலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த யோசனைகளை ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீன போராளிக்குழுக்கள் தொடர்ந்து நிராகரித்து வருகின்றன. கடந்த மே மாதம் இதே அறிவிப்பை சவுதி அரேபியா வெளியிட்டது. அப்போது, கருத்து தெரிவித்த ஹமாஸ் அமைப்பு, பாலஸ்தீனர்களின் பாதுகாப்பு பாலஸ்தீனியர்கள் அடங்கிய ராணுவத்திடம் மட்டுமே இருக்க வேண்டும். முஸ்லீம் அரபு நாடுகள் உட்பட எந்த ஒரு வெளிநாட்டுப் படையும், ஆக்கிரமிப்பு படைகளாகவே கருதப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தது.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், எகிப்து, ஜோர்டான் நாடுகள் இஸ்ரேல் உடன் ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் இணைந்துள்ளன. சவுதி இன்னும் அதை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதே நேரம் இஸ்ரேலுடன் தொடர்ந்து மறைமுகமாக நட்பு பாராட்டி வருவதாக பார்க்கப்படுகிறது.

உலக சன்னிப்பிரிவு இஸ்லாமிய நாடுகளின் தலைமைப் பீடமாக தன்னை காட்டிக் சவுதி அரேபியா முயன்று வந்தது. அதற்கான போட்டியில் துருக்கியும் இருந்து வந்தது. ஆனால் காசா விவகாரத்தில் 2 நாடுகளும் பாலஸ்தீனியர்களை கைவிட்டுள்ளன. பாலஸ்தீனியர்கள் சன்னிப்பிரிவு முஸ்லீம்களாக உள்ளனர்.

அதே நேரம் ஷியா பிரிவு நாடான ஈரான் மற்றும் அதன் கூட்டணி படைகள் மட்டுமே, காசா விவகாரத்தில் தங்கள் முழு பலத்தை கொண்டு, இஸ்ரேலுக்கும் அதன் கூட்டணி படைகளுக்கும் சவாலாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனால் சன்னிப்பிரிவு இஸ்லாமியர்கள் மத்தியிலும், ஈரான் தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய செல்வாக்கை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

===

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button