இந்தியா

பவன் கல்யாண் ஒரு கிறிஸ்தவர்” மொத்த ஆட்டமும் குளோஸ்!

இந்த வீடியோவில் பேசுபவர் பாஜகவின் சர்ச்சைக்குரிய தலைவர் ராஜா சிங். எம்எல்ஏ. இவர் என்ன பேசுகிறார் என்றால், பவன் கல்யாண் அவர்களே, நீங்கள் இந்து மதத்திற்கு எதிராக உள்ளீர்கள். உங்கள் கட்சியில் யாரும் இந்துக்கள் இல்லையா. நீங்களும் மதம் மாறிவிட்டீர்களா என கேள்வி எழுப்புகிறார்.பவன் கல்யாணை நோக்கி, மதம் மாறி விட்டீர்களா என அவர் கேள்வி எழுப்பியதற்கு முக்கிய காரணம் உள்ளது.

எனினும் இந்த வீடியோ 2019ஆம் ஆண்டு வெளியானது. தற்போது, பவன் கல்யாண் உடன் பாஜக கூட்டணி வைத்தால், அவரது மதத்தை பற்றி பேசுவதை நிறுத்திக் கொண்டது.தற்போது, பவன் கல்யாண் திருப்பதி லட்டு விவகாரத்தை கையில் எடுத்துள்ள நிலையில், பவண் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை, மதம் குறித்து எதிர்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளன. அதில் தான் பெரிய டுவிஸ்டே உள்ளது.பவன் கல்யாணின் மனைவி ரஷ்யாவைச் சேர்ந்த கிறிஸ்தவர். அவரது மகள் மற்றும் மகனும் கிறிஸ்தவ பெயர்களுடன், கிறிஸ்தவர்களாகவே வாழ்ந்து வருகின்றனர். இது தான் எதிர்கட்சிகளுக்கு தற்போது, கிடைத்துள்ள ஆயுதம். இந்த ஆயுதத்தை தான் முன்னர் பாஜக பயன்படுத்தி வந்தது. சரி, பவன் கல்யாண் ஏன் கிறிஸ்தவ பெண்ணை திருமணம் செய்தார் என்பதை பார்க்கலாம்.

பவன் கல்யாணின் தற்போதைய மனைவி, அன்னா லெஷ்னேவா ரஷ்யாவைச் சேர்ந்த நடிகை, மற்றும் பெண் தொழில் அதிபர் ஆவார்.வழக்கமாக தெலுங்கு நடிகர்கள் தங்களது பெயர்களுடன், தங்களது சாதி மற்றும் குடும்பப் பெயர்களை சேர்த்துக் கொள்வார்கள். அந்த நடிகர்களை திருமணம் செய்யும், மனைவியும் அந்த குடும்ப பெயர்களை சேர்த்துக் கொள்ள வேண்டும்.உதாரணமாக நடிகை சமந்தா, நாக சைதன்யாவை திருமணம் செய்த பிறகு, சமந்தா அக்னினேனி என்ற, நாகர்ஜுனாவின் குடும்பப் பெயருடன் சுற்றித் திரிந்து வந்தார். தற்போது, விவாகரத்து ஆனவுடன் மீண்டும் சமந்தா ரூத் பிரபுவாக மாறியுள்ளார். கேரள கிறிஸ்தவ பெண்ணான சமந்தா, இந்து மதத்திற்கும் மாறி இருந்தார்.

ஆனால் பவன் கல்யாணின் தற்போதைய மனைவி, அன்னா லெஷ்னேவா தெலுங்கு நடிகர்களின் வழக்கத்தையெல்லாம் காலால் எட்டி உதைத்து விட்டார். அவர் மதம் மாறவில்லை. பெயரையும் மாற்றிக் கொள்ளவில்லை.மேலும் அவருக்கும், பவன் கல்யாணுக்கும் பிறந்த, ஆண் குழந்தைக்கு மார்க் சங்கர் பாவனோவிச் என்றும் பெண் குழந்தைக்கு பொலினா அஞ்சனா பாவ்னோவா என்ற ரஷ்ய கிறிஸ்தவ பெயரையும் சூட்டியுள்ளார். இது தான் தற்போது எதிர்கட்சிகளின் வாய்க்கு அவிலாக அமைந்துள்ளது.

மேலும் பவன் கல்யாணின், கடந்த காலங்களையும் தோண்டி எடுத்துள்ளனர். பவண் கல்யானின் முதல் மனைவி நந்தினி. 19 வயது பெண்ணாக அப்போது இருந்த, நந்தினியை 1997 ஆம் ஆண்டு பவண் கல்யாண் திருமணம் செய்தார். அவருடன் வாழ்ந்து கொண்டிருந்த போதே, ரேணு தேசாய் என்ற மராத்திய நடிகையுடன் காதலில் விழுந்தார்.
இந்நிலையில், பவன் கல்யாண் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதல் மனைவி நந்தினி, பவண் கல்யாண் வீட்டிற்கு வருவதில்லை என்றும், வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து, பலதார மண வாழ்க்கையில் உள்ளதாக குற்றம்சாட்டினார்.இதுகுறித்து நீதிமன்றத்தில் விளக்கம் அளித்த பவன் கல்யாண், ரேணு தேசாய் உடன், திருமணம் கடந்த உறவில் உள்ளதாகவும், அவரை இன்னும் திருமணம் செய்யவில்லை என்று கூறி, தப்பினார்.

இதனையடுத்து, இரண்டே வருடத்தில் நந்தினியை விவாகரத்து செய்து விட்டு, ரேணு தேசாயை இரண்டாவதாக திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்தது. ஆனால் 2வது குழந்தை பிறந்த சில மாதங்களிலேயே, 3வதாக ரஷ்ய நடிகை மற்றும் மாடல் அழகியான அன்னா லெஷ்னேவாவுடன் காதலில் விழுந்தார்.
இதனால் 2வது மனைவி ரேணு தேசாயை கழற்றி விட்டு, 3வது திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் தனது வேதனையை பதிவிட்ட ரேணு தேசாய், இந்த திருமணத்தில் இருந்து, தான் வெளியேறவில்லை என்றும், பவன் கல்யாண் தான் வேறு பெண்ணுடன் சென்று விட்டார் எனக் குறிப்பிட்டார்.

மதம் மாறாமல், பெயரை மாற்றாமல், தனது குழந்தைகளுக்கும் ரஷ்ய கிறிஸ்தவ பெயரை சூட்டும் அளவிற்கு அன்னா லெஷ்னேவாவுக்கு பவன் கல்யாண் இவ்வளவு உரிமைகளை கொடுத்துள்ளதற்கு ஒரு காரணத்தை எதிர்கட்சிகள் குறிப்பிடுகின்றனர். அது தான் இன்னொரு டுவிஸ்ட்.சினிமாவில் சம்பாதித்தது, குடும்பச் சொத்து என பவன் கல்யாணுக்கு சுமார் 100 கோடி ரூபாய் சொத்து மட்டுமே உள்ளதாகவும், ஆனால், 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவுக்கு 2000 கோடி ரூபாய் சொத்து உள்ளதாகவும், கூறுகின்றனர். சிங்கப்பூர் உள்ளிட்ட பல இடங்களில், அவருக்கு சங்கிலித் தொடர் உணவு விடுதிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

எனவே கிறிஸ்தவ மனைவி, கிறிஸ்தவ குழந்தைகள், கிறிஸ்தவரின் பணம் என வீட்டிலேயே மாற்று மதத்தை வைத்துக் கொண்டு, இந்து மத உணர்வுகளை தூண்ட உங்களுக்கு எப்படி மனம் வருகிறது என ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.அவரது அரசியல் பயணத்தை தொடர, மனைவியின் பணம் தான் அவருக்கு உதவியதாகவும் கூறுகின்றனர்.இதில் இன்னொரு டுவிஸ்ட், தற்போது, துணை முதலமைச்சர் ஆகியுள்ள நிலையில், தனது அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும், தனது மனைவி, தனது குடும்ப உறுப்பினர்களை மதிக்காமல் நடந்து கொள்கிறார் என்றும் கூறி, 3வது மனைவியும் பவன் கல்யாண் விவாகரத்து செய்ய உள்ளதாக தேர்தலுக்கு முன்னரே தகவல் பரவியது. ஆனால் வெற்றிக் கொண்டாட்டத்தில் அன்னா லெஷ்னேவா கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button