உலகம்

328வது நாளாக எதிர்த்து சண்டை செய்யும் பாலஸ்தீனியர்கள்!

328வது நாளாக நீடிக்கும் காசா போர்…
ஆக்கிரமிப்பு படைகளிடம் வீழாமல் போரிடும் பாலஸ்தீனியர்கள்…

காசா மீதான இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல் 328வது நாளை எட்டியுள்ள நிலையில், தங்களது தாக்குதல் விபரங்களை பாலஸ்தீன போராளிக்குழுக்கள் பட்டியலிட்டுள்ளன.
காசா சிட்டியின் அல் செய்தூன் பகுதியில் இஸ்ரேல் படையினர் வந்து கொண்டடிருந்த போது, திடீரென குண்டுகள் வெடித்துச் சிதறியுள்ளன. பாலஸ்தீன் இஸ்லாமிக் ஜிகாத், அல் குத்ஸ் படை ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்தத் தாக்குதலில், ஆக்கிரமிப்பு தரப்பில் கடும் உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல் செய்தூன் பகுதியில் ஹமாசின் அல் கஸ்ஸாம் ராணுவத்தின் ஸ்னைப்பர் வீரர், குறிவைத்து சுட்டதில், ஆக்கிமிரப்பு தரப்பில் 2 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு, தெற்கு காசாவை பிரிக்கும், நெட்சரிம் ஆக்சிஸ் பகுதியை விரிவுபடுத்தும் நோக்கில் முன்னேறியே ஆக்கிரமிப்பு ராணுவத்தின் 16வது தரைப்படையை, கடும் பதிலடி கொடுத்து, தடுத்து நிறுத்தியதாக போராளிக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

இதே போல் மேலும் சில பாலஸ்தீன குழுக்கள் ஆக்கிரமிப்பு ராணுவத்தை குறிவைத்து, பலகட்டத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில், தங்கள் தரப்பில் 2 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் படை தெரிவித்துள்ளது.


=====

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button