காசா துயரங்களுக்காக எப்போதும் நினைவு கூறப்படுவார் ஜோ பைடன் – பாலஸ்தீனியர்கள் கருத்து!
அரசியல் காரணங்களுக்காக பைடனின் இஸ்ரேல் ஆதரவு சுமார் 40 ஆயிரம் பாலஸ்தீனியர்களை காவு வாங்கியது

வயது முதிர்வு காரணமாக அமெரிக்க அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறார் அதிபர் ஜோ பைடன். அதே நேரம் அவரது நிர்வாகம் ஏற்படுத்திய விளைவுகள் மிக மோசமானவையாக பார்க்கப்படுகிறது.
டொனால்டு டிரம்ப் சர்ச்சைக்குரிய நபராக இருந்தாலும், அவர் ஆட்சியில் எந்த போரையும் அமெரிக்க முன்னெடுக்கவில்லை. மாறாக ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வெளியேற வகை செய்தார். தீவிர இஸ்ரேல் ஆதரவாளராக இருந்தாலும் கூட, இஸ்ரேலை கட்டுப்படுத்தும் திறனும் அவருக்கு இருந்தது.
ஆனால் அரசியல் காரணங்களுக்காக ஜோ பைடன் இஸ்ரேலுக்கு அளித்த நிபந்தனையற்ற ஆதரவு சுமார் 40 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் படுகொலைக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் ஜோபிடனை பாலஸ்தீனிய தலைவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள US Campaign for Palestinian Rights Action அமைப்பு இஸ்ரேல், காசாவில் நிகழ்த்திய இனப்படுகொலைகளுக்காக ஜோ பிடன் என்றென்றும் நினைவு கூறப்படுவார் எனத் தெரிவித்துள்ளது. விவாதத்தில் மட்டும் பைடன் தோற்கவில்லை, நாட்டை வழிநடத்தும் தகுதியையும் அந்த விவாதத்தின் மூலம் அவர் இழந்தார். பாலஸ்தீனியர்களை கொல்ல லட்சக்கணக்கான வெடிகுண்டுகளை அவர் அனுப்பி வைத்தார். அது பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையும், எதிர்காலத்தையும் கொடூரமான முறையில் அழித்துள்ளது.” என அந்த அமைப்பு சாடியுள்ளது.